Sunday, January 9, 2011

மர்மங்கள் நிறைந்த ஆழ்கடல்


பூமியின் பரப்பளவில் 70 சதவீதத்திற்கும் மேல் கடல் பரந்து விரிந்துள்ளது. கடலைப் பற்றி இதுவரை தெரிந்த விஷயங்களை விட, தெரியாத விடயங்களே. ஏராளமாக இருக்கின்றன. ஆழ்கடலுக்குள் செல்லச் செல்ல... வியக்க வைக்கும் பல அதிசயங்கள் வெளிப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆழ்கடலின் அடியில் ஒரு வித்தியாசமான சூழ்நிலை நிலவுகிறது.அஙகு 3 முதல் 6 டிகிரி வரையிலான உறைய வைக்கும் குளிர் நிலவுகிறது. நிலப்பரப்பில் இருப்பதை விட ஆயிரக் கணக்கான மடங்கு அதிகமான அழுத்தமும் இங்கு காணப்படுகிறது.
மனிதன் உயிர் வாழவே முடியாத இத்தகைய சூழ்நிலையில் சில அபூர்வ உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. பெரிய கண்களுடனும், பெரிய வாயுடனும், நீண்ட உணர்ச்சி உறுப்புகளுடனும் இருக்கும் ‘பயோலுமினிசென்ட்’ என்ற ஒருவகை மீன்கள் இங்கு வாழ்கின்றன.ஜெல்லி போன்ற உடலமைப்புக் கொண்ட இவை கடலுக்கு அடியில் இருக்கும் பாக்டீரியாக்களையும், நுண்ணுயிரிகளையும் உண்டு இவை உயிர் வாழ்கின்றன. பவளங்கள், சிறிய புழுக்கள், சுறா மீன்கள், டிராகன் மீன்கள், மணி வடிவமுள்ள ஜெல்லி மீன்கள் போன்ற மற்ற உயிரினங்களும் கடலின் அடி ஆழத்தில் சுதந்திரமாக வசித்து வருகின்றன.
அறியப்படாத பெருமளவு உயிரினங்கள் இன்னும் கடலுக்குள் புதைந்துள்ளன. கடலின் அந்தரங்கம் குறித்து ஆராய்ந்தால் வியப்பான பல விஷயங்கள் கிடைக்கும்.கடலுக்குள் பாரிய மலைகள்கடலின் ஆழத்தை நேரடியாகக் கண்டறிய முடியாது. ஒலி ஆலைகளின் மூலமாக இந்த ஆழத்தை நிர்ணயிக்கிறார்கள். உலகிலுள்ள முப்பது நாடுகள் ஒன்று சேர்ந்து கடலின் அந்தரங்கத்தை அறிய 1955ல் ஒரு அமைப்பை உருவாக்கின. 1970 ஆம் ஆண்டு வரை கிடைத்த ஆய்வுத் தகவல்களைக் கொண்டு கடலின் தரைப் பகுதி வரைபடமாக உருவாக்கப்பட்டது.பெருங்கடற்பரப்பின் நடுவே சுமார் பதின் மூன்றாயிரம் அடி உயரம், நூறு முதல் நூற்றி இருபது மைல் அகலம் கொண்ட மலைகள் சுமார் நாற்பதாயிரம் மைல்தூரம் பரவியுள்ளன. இது தவிர கண்டத் தீவுகள், கடல் தீவுகள், பவளத் தீவுகள் என்பனவும் நடுக்கடலில் காணப்படுகின்றன.

சச்சின் ரமேஷ் தெண்டுல்கர்

முழுப்பெயர்:சச்சின் ரமேஷ் தெண்டுல்கர்
பிறப்பு: 24 ஏப்ரல் 1973. பம்பாய் (தற்போது மும்பை), மஹாராஷ்டிரா, இந்தியா
மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர்
பந்து வீச்சு முறை:வலதுகை சுழற்பந்து வீச்சாளர், இடப்புறமும், வலப்புறமும் சுழன்று திரும்பும் படியான சுழல் வீச்சு (off break, leg break googly). மிதவேக பந்து வீச்சு.
அணியில் வீரரின் நிலை: ஆல்ரவுண்டர்
விளையாடிய அணிகள்: இந்தியா, ஆசியா லெவன், மும்பை, மும்பை இந்தியன்ஸ், யார்க் ஷையர்
அறிமுகம்: டெஸ்ட் போட்டி: நவம்பர் 15-20, 1989, இந்தியா - பாகிஸ்தான் இடையே கராச்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.ஒருதினப் போட்டி: டிசம்பர் 18, 1989 அன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே குர்ஜன்வாலாவில் நடைபெற்ற ஒருதினப் போட்டி20 ஓவர் போட்டி: டிசம்பர் 1, 2006 அன்று இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி
தலைசிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரரான சச்சின் தெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில், நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் படித்தவர். உயர்நிலைப் பள்ளி படிப்போடு கல்விக்கு விடை தந்துவிட்டு கிரிக்கெட் வாழ்க்கையில் நுழைந்தவர்.
பின்னர் 1988/89 இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ரன்கள் குவித்தார். இந்த போட்டிதான் இவர் ஆடிய மாநிலங்களுக்கிடையிலான முதல் போட்டி என்பதும், அப்போது அவருக்கு வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.
தெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு தம் 16வது வயதில் முதன் முறையாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். இத்தொடரின்போது பாகிஸ்தான் வீரர் வாக்கர் யூனிஸ் வீசிய பந்து பட்டு சச்சினின் வாயில் காயம் ஏற்பட்டது. ரத்தம் அவரது சட்டையில் வழிந்தபடி இருந்தது. ஆயினும் அவர், உடனே களத்தை விட்டு வெளியேறாமல், மன உறுதியுடன் காயத்துடனே விளையாடினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவர் இரண்டு அரைசதங்கள் அடித்தார்.
1990-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் சதத்தை அடித்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாக தொடர்ந்து ஆடி வரும் இவர், டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களுக்கு மேல் குவித்த ஏழு வீரர்களில் ஒருவராவார். அவர் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 11,782 ரன்கள் எடுத்து தரவரிசையில் இரண்டாமிடத்தில் உள்ளார். முதல் இடத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முன்னாள் வீரர் பிரையன் லாரா 11,953 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 39 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஒருதினப் போட்டிகளின் சாதனை நாயகன் இவர். அதிக அளவு (417) ஒருதினப் போட்டிகளில் விளையாடி வருகிறவர், ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (16,361) ரன்களைக் குவித்தவர், ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (42) சதங்களைக் கடந்தவர், ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (89) அரை சதங்களைக் கடந்தவர், 417 ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (57 முறை) ஆட்டநாயகன் விருதைப் பெற்றவர், 96 ஒரு தினப் போட்டி தொடர்களில் அதிக அளவு (13 முறை) தொடர்நாயகன் விருதைப் பெற்றவர் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.
1999-ல் இந்தியாவில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராகுல் திராவிட்டுடன் (153 ரன்கள்) ஜோடி சேர்ந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 186 ரன்கள் குவித்தார். இப்போட்டியில் இந்திய அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவே ஒருதினப் போட்டிகளில் இவரது அதிகபட்ச ரன்களாகும். இதே போட்டியில்தான் திராவிட்டும் தனது ஒருதினப் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை பதிவு செய்தார்.
கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரம் சச்சின் தெண்டுல்கரின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு கிரிக்கெட் உலகின் பிதாமகன் டான்பிராட்மேன் சொன்ன வார்த்தைகள் 'நான் என்னுடைய இளம் வயதில் எப்படி துடிப்போடு கிரிக்கெட் விளையாடினேனோ.. அந்த நாட்களை என் கண் முன்னே நிறுத்துகிறார் சச்சின். அவர் ஆட்டத்தில் என்னைப் பார்க்கிறேன்' என்ற மனதாரப் பாராட்டினார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக தலைமையேற்று அரை இறுதிப்போட்டி வரை அணியை வழிநடத்திச் சென்றார். இவர், அப்போட்டித் தொடரில் காயம் காரணமாக முதல் பாதி ஆட்டங்களில் விளையாடவில்லை என்றாலும், பிற்பாதி ஆட்டங்களில் அணியை திறம்பட வழிநடத்தினார்.
இவரது ஆட்டமுறை கிரிக்கெட் விளையாட வருபவர்களுக்கு ஒரு பாடம். இவரது நேர்த்தியான பேட்டிங் திறமையால், பிற அணிகளில் உள்ள திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்கள் கூட இவருக்கு பந்து வீசத் திணறுவார்கள்.
அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த அணியில் இடம்பிடித்து விளையாடினார்.
இத்தொடரின்போது, டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் லாராவை (11,953 ரன்கள்) சச்சின் முந்துவார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இத்தொடரின் துவக்கத்தில் இச்சாதனை படைக்க சச்சினுக்கு 172 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 6 இன்னிங்சிலும் சேர்த்து 95 ரன்கள் மட்டுமே எடுத்து, ரசிகர்களை ஏமாற்றினார். தற்போது இவர் 11,877 ரன்களுடன் இரண்டாமிடத்தில் இருக்கிறார்.
இத்தொடர் முடிவடையும் நேரத்தில் இவருக்கு காயம் ஏற்பட்டதால் இலங்கைக்கெதிரான ஒருதினத் தொடரில் இருந்து விலகினார்.
இவருக்கு அண்மையில்தான் இந்திய அரசு பத்மவிபூஷன் பட்டம் வழங்கி கௌவுரவித்துள்ளது.