Saturday, November 3, 2012



1. பிளாஸ்மா (plasma):

இப்போதெல்லாம், பிளாஸ்மா காட்சித் திரைகள், மிகப் பெரிய ஹை டெபனிஷன் டிவிக்களிலும், டிஜிட்டல் சைன் போர்டுகளிலுமே பயன் படுத்தப்படுகின்றன. மாறுபட்ட ஒளிக் காட்சியைக் காட்ட இதனைப் பயன்படுத்து கின்றனர். இவற்றில் வண்ணங்கள் சிறப்பாகக் காட்டப்படுகின்றன.

எந்த ஒரு கோணத்தில், காட்சித் திரையிலிருந்து விலகி இருந்து பார்த்தாலும், வண்ணங்கள் இடம் மாறாது. எனவே தான், பொது இடங்களில் விளையாட்டு நிகழ்வுகளைக் காட்ட பெரும்பாலும் இது பயன்படுகிறது. ஒரு வண்ணத்தைத் திரைக்குக் கொண்டு வரும் நேரம் (response time)இந்த வகைத் திரையில் மிக மிகக் குறைவு.

இதனால், ஒரு வண்ணத்தில் இருந்து இன்னொரு வண்ணத்திற்கு எந்த பிசிறலும் இல்லாமல் உடனடியாக மாறக் கூடியவை பிளாஸ்மா திரைகளாகும். ஆனால், பிளாஸ்மா திரைகள் இயங்க அதிக மின் சக்தி தேவை; திரையின் தடிமனும் அதிகமாகவும் கனமாகவும் இருக்கும். எனவே இவற்றை மொபைல் போன்களிலும், டேப்ளட் பிசிக்களிலும் பயன்படுத்தவே முடியாது.

சிறிய அளவில் இதன் திரை அமைக்கப்பட்டால், பெரிய அளவில் ரெசல்யூசன்களை இதில் கொண்டு வர இயலாது. தொடக்கத்தில் ஒரே அளவிலான ஒரு பிளாஸ்மா திரைக்கும் எல்.சி.டி. திரைக்கு மான விலையில் நிறைய வித்தியாசம் இருந்தது. தற்போது இந்த வித்தியாசம் வெகுவாகக் குறைந்து உள்ளது.


2. ஓ.எல்.இ.டி. (OLED Organic Light Emitting Diode):

டிஜிட்டல் டிஸ்பிளே தொழில் நுட்பத்தில், அண்மைக் காலத்தில் மார்க்கட்டைக் கலக்கும் தொழில் நுட்பம் இது. சில விளம்பரங்களில் இதனை AMOLED Active Matrix Organic Light Emitting Diode எனவும் குறிப்பிடுகின்றனர். இந்த முதல் இரண்டு இணைப்பு சொற்களும், இதில் பிக்ஸெல்கள் எப்படி அடுக்கப்பட்டு இயங்குகின்றன என்று விளக்குகின்றன.

காட்சியைக் கட்டுப் படுத்தும் கண்ட்ரோலர் எப்படி ஒவ்வொரு சிறிய பிக்ஸெல்லையும் கட்டுப்படுத்தும் திறன் கொண்டுள்ளது என்பதை இது விளக்குகிறது. இருந்தாலும், இதில் மட்டுமே Active Matrix என்ற வகை உள்ளது என்று கூற இயலாது. இப்போது வரும் நுகர்வோர் சாதனங்களில் உள்ள OLED and LCD திரைகள் அனைத்துமே Active Matrix வகையையே பயன்படுத்துகின்றன. OLED வகைத் திரைக் காட்சியும் பிளாஸ்மா

போலவே செயல்படுகிறது. இங்கு ஓர் ஒளிக்கற்றையைக் கொண்டு வர கேஸ் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இதில் உள்ள எலக்ட்ரோடுகள், ஒளியை வெளிப்படுத்தும் ஓர் ஆர்கானிக் பாலிமரைக் கொண்டு வருகின்றன. இங்கு பாலிமர் என்பது, திரும்பத் திரும்ப வரும் மிகச் சிறிய மாலிக்யூல்கள் கொண்ட பெரியதொரு மாலிக்யூல்கள் ஆகும்.

OLED தொழில் நுட்பம் நிறைய அனு கூலங்களைக் கொண்டது. மிகக் குறைந்த அளவிலேயே மின்சக்தியைப் பயன்படுத்து கிறது. மிகக் குறுகிய அளவில், நேரடியாக ஒளியை வெளிப்படுத்துகின்றன. அதனாலேயே, ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்ளட் பிசிக்களில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. வண்ணத்தைத் திரைக்குக் கொண்டு வரும் response time இதில் மிக மிக வேகமாகவும் குறைவான நேரத்திலும் இயங்குகிறது.

இதன் ஒரே பிரச்னை இதன் தயாரிப்பு செலவு தான். எல்.சி.டி. அல்லது பிளாஸ்மா வகைத் திரையைக் காட்டிலும், இதனைத் தயாரிக்க அதிக பொருட்செலவு ஆகும்.

தற்போது Super AMOLED Plus என சில வகைத் திரைகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. OLED தொழில் நுட்பத்தில், ஆங்காங்கே மிகச் சிறிய வேறுபாடுகளைக் கையாண்டு இவை வெளிவரு கின்றன. ஆனால், செயல்பாட்டின் அடிப்படையில் இவை AMOLED தொழில் நுட்பம் கொண்ட வையே.


3. எல்.சி.டி. (LCD–Liquid Crystal Display):

மிக அதிகமான அளவில் பயன்படுத்தப்படும் காட்சித் திரை இதுதான். ஹை டெபனிஷன் டிவி, டெஸ்க்டாப், லேப்டாப் மானிட்டர் கள், டேப்ளட் பிசிக்கள் மற்றும் மொபைல் போன் திரைகள் என எங்கும் இது பயன் பாட்டில் உள்ளது. இதன் வகைகள் எனப் பல பேசப்பட்டாலும், அடிப்படையில் மூன்று வகைகள் பிரபலமானவை. அவை –– twisted nematic, InPlane Switching, and patterned vertical alignment.


எல்.சி.டி. ட்விஸ்டட் நெமாடிக் (டி.என். அல்லது டி.என்.பிலிம் TN or TNFilm):

இவ்வகைத் திரைகளின் பேனல்கள் மிக மலிவானவை. எனவே அதிக எண்ணிக்கையில் எளிதாகத் தயாரிக்க முடியும். வண்ணத்தைத் திரைக்குக் கொண்டு வரும் response time இதில் மிக மிகக் குறைவாகும். 2 மில்லி செகண்ட் கூட ஆகாது. ஆனால், மொத்த காட்சி வெளிப்பாட்டில் இவை சில குறைகளைக் கொண்டுள்ளன.


எல்.சி.டி. இன் - பிளேன் ஸ்விட்சிங் (IPS):

மேலே டி.என்.பிலிம் வகை எல்.சி.டி. திரைகளில் உள்ள குறைபாடுகளை நீக்கும் வகையில், ஹிடாச்சி நிறுவனம் இந்த தொழில் நுட்பத்தினை வடிவமைத்தது. மற்ற எல்லா வகைகளிலும் இது உயர்ந்து இருந்தாலும், இதன் ரெப்ரெஷ் ரேட் தேவையான அளவு இல்லாததால், அதிகம் பயன்படுத்தப் படுவதில்லை.


எல்.சி.டி. வெர்டிகலி அலைன்டு (VA Vertically Aligned):

மேலே கூறப்பட்ட இரண்டு வகைகளுக்கும் இடையேயான தன்மையைக் கொண்டது. ஐ.பி.எஸ். தொழில் நுட்பம், சற்று தாமதமாகவும், மந்த ஒளிக் காட்சியாகவும் திரையில் செயல்பட்டது. டி.என். வகை வேகமாகவும், நல்ல வெளிச்சக் காட்சியாகவும் இருந்தாலும், மொத்தத்தில் காட்சி தன்மையில் குறை வாகவே இருந்தது. இவற்றிற்கு இடையே வெர்டிகலி அலைன்டு தொழில் நுட்பம் உள்ளது. ஒரு சில நிறுவனங்கள் இந்த வகை தொழில் நுட்பத்தினைச் சிறப்பாகத் தருவதாகக் கூறி வருகின்றன.


4. எல்.இ.டி. (LED) :

மேலே கூறப்பட்ட வற்றில் இருந்து சற்றே சில மாறுதல் களுடன் எல்.இ.டி. (LED (lightemitting diode) மற்றும் டி.எப்.டி. காட்சித் திரைகள் தற்போது பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தொலைக் காட்சிப் பெட்டிகளில் இவை பயன்படுத்தப்படுகையில், பெரிய அளவில் வண்ணங்கள் கிடைக்கின்றன. மிகவும் குறைவான மின்சக்தியைப் பயன்படுத்தும் இவை அதிக நாட்கள் உழைக்கக் கூடியவையும் ஆகும்.


5. டி.எப்.டி (TFT:ThinFilm Transistor)

இந்த தொழில் நுட்பம் மேலே கூறப்பட்ட அனைத்து activematrix திரைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. தயாரிப்பு செலவு குறைவான வகைகளில் இது இடம் பெறுகிறது. மொபைல் போன்களில் பெரும் பாலும் இது பயன்படுத்தப்படுகிறது.

ஹெர்ட்ஸ் எதனைக் குறிக்கிறது?



                                ஹெர்ட்ஸ் என்பதனை சுருக்கமாக Hz என்று எழுதுகிறோம். இது Hertz என்பதன் சுருக்கம். இது ஜெர்மன் பிசிக்ஸ் விஞ்ஞானி Heinrich Rudolf என்பவரின் குடும்ப பெயர். ரேடியோ மற்றும் எலக்ட்ரிக்கல் அலைவரிசையினை மெட்ரிக் முறையில் அளந்திட இந்த பெயர் வைக்கப்பட்டது. ஒரு ஹெர்ட்ஸ் என்பது ஒரு விநாடியில் ஏற்படும் ஒரு சுற்று அல்லது அசைவு (ரேடியோ அலைவரிசையில்) கம்ப்யூட்டரைப் பொறுத்த வரை இது மானிட்டருடன் அதிகம் சம்பந்தப்படுத்தி பேசப்படுகிறது.

                        சி.ஆர்.டி. மானிட்டர் (டிவி பெட்டி போல இருப்பது) அதன் ஸ்கிரீன் இமேஜை தொடர்ந்து காட்டாமல் விட்டு விட்டுத் தான் காட்டுகிறது. ஆனால் அதனை நாம் நம் கண்களால் பார்த்தால் கண் கெட்டுப் போகும். எனவே தான் விநாடியில் பலமுறை இது விட்டு விட்டுக் காட்டப்படுகையில் இடைவெளி தெரிவதில்லை. எடுத்துக் காட்டாக 85 Hz என்பதில் விநாடி நேரத்தில் 85 முறை இமேஜ் பின் வாங்கப்பட்டு மீண்டும் காட்டப்படுகிறது. அத்தனை முறை காட்டப்படுவதனாலேயே இமேஜ் அப்படியே நிலையாக நிற்பது போல நாம் உணர்கிறோம்.
                                 
                                    மெஹா ஹெர்ட்ஸ் Mehahertz (MHz) ஒரு மெஹா ஹெர்ட்ஸ் என்பது பத்து லட்சம் சுற்றுகளாகும். அதாவது ஒரு விநாடியில் பத்து லட்சம் சுற்றுகள் ஏற்படுகின்றன. இது எப்படி ஏற்படுகிறது என்பதனை படமாகவோ அல்லது வேறு வழியாகவோ விளக்குவது கஷ்டம். கம்ப்யூட்டர் பிராசசரைப் பொறுத்தவரை மெஹா ஹெர்ட்ஸ் என்பது மிகவும் சாதாரணம். ஒரு கம்ப்யூட்டர் பிராசசர் உள்ளாக அமைந்த ஒரு கடிகார துடிப்பினை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. ஒவ்வொரு துடிப்பிற்கும் ஒரு செயல் மேற்கொள்ளப்படுகிறது. எத்தனை முறை இந்த துடிப்பு ஏற்படுகிறது என்பதுதான் பிராசசரின் கிளாக் ஸ்பீட் என அழைக்கப்படுகிறது. இந்த வேகம் மெஹா ஹெர்ட்ஸ் என்பதில் அளக்கப் படுகிறது.

                                 முதலில் வந்த பெர்சனல் கம்ப்யூட்டர்கள் 4.77 மெஹா ஹெர்ட்ஸ் வேகம் கொண்ட பிராசசர்களைக் கொண்டிருந்தன. அதாவது விநாடிக்கு ஏறத்தாழ 48 லட்சம் கிளாக் துடிப்புகள். தற்போதைய பெண்டியம் 4 கம்ப்யூட்டர் பிராசசர் 3.2 கிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்டுள்ளன. (ஒரு கிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெஹா ஹெர்ட்ஸ்.) எனவே கணக்குப் போட்டு இந்த அதிவேக துடிப்புகளை உணர்ந்து கொள்க. கிஹா ஹெர்ட்ஸ் Gigahertz (GHz) கம்ப்யூட்டர் உலகில் இது கம்ப்யூட்டர் பிராசசரின் வேகத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெஹா ஹெர்ட்ஸ். தற்போது வரும் கம்ப்யூட்டர் பிராசசர் வேகம் இந்த அளவிலேயே சொல்லப்படுகிறது.

 

இந்திய விடுதலை போராட்ட வீரர்களின் பெயர்கள்













































































































Friday, March 2, 2012

யார் இந்த எஸ்.பி.உதயகுமார்?


இந்தியாவில் அணு சக்திக்கு எதிரான போராட்டங்கள் எங்கு நடந்தாலும், சுப.உதயகுமாரன் அங்கே இருப்பார். நாகர்கோவில்காரர். இளநிலை கணிதம், முதுகலை ஆங்கில இலக்கியம் முடித்துவிட்டு, எத்தியோப்பியாவில் ஆறு வருடங்கள் பள்ளி ஆசிரியராக இருந்தார். பிறகு, அமெரிக்காவின் நாடர் டேம் பல்கலைக்கழகத்தில் அமைதிக் கல்வியில் முதுகலைப் பட்டமும், ஹவாய் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

இவரின் தந்தை அரசியலில் ஆர்வம்கொண்டவர். இவரின் தாய் சமூகப் பணியாளராக இருந்தவர். அந்த உந்துதலினால், அரசியலுக்காகவும் மக்களுக்கான அறிவியலைக் கொண்டுசெல்லவும் பல விழிப்பு உணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்.

இவர் அணுசக்திக்கு எதிராகப் போராட தனிப்பட்ட ஒரு காரணமும் உண்டு. இவரின் தாத்தா, பாட்டி நால்வரில் மூன்று பேர் புற்றுநோய் தாக்கி இறந்தனர். அதற்குக் காரணம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரிய மணல் போன்ற கனிமங்களில் இயற்கைக் கதிர் வீச்சு அதிகமாக இருப்பது. அதைத் தனியார் நிறுவனங்கள் அதிகமாகச் சுரண்டச் சுரண்ட... அங்கே இருந்த மக்களுக்குப் புற்றுநோய் அதிகம் தாக்கியது. அந்தச் சுரண்டல் இப்போதும் தொடர்கிறது. கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை, கன்னியாகுமரி முதல் ஆலப்புழை வரையில் உள்ளவர்களுக்கு அதிகமான அளவில் புற்று நோய் உள்ளது!

களப்பணியில் மட்டும் இன்றி, இவரை அணு சக்திக்கு எதிராக எழுதவும் ஊக்கம் தந்த பேராசிரியர் எபினேசர் பால்ராஜும் புற்றுநோயால் இறந்தார். எனவே, 'புற்றுநோய் கல்வி’ என்கிற புத்தகத்தை அவருக்கு அர்ப்பணித்திருக்கிறார் சுப.உதயகுமாரன்.

'தி கூடங்குளம் ஹேண்ட் புக்’, 'கான்ஃப்ரன்டேஷன்ஸ் ஆஃப் டிசாஸ்டர்’, 'கிரீன் பாலிட்டிக்ஸ் இன் இண்டியா’ ஆகிய புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். 'அசுரச் சிந்தனைகள்’ நூலின் தொகுப்பாசிரியர். அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளின் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியர். தமிழிலும், ஆங்கிலத்திலுமாகப் பல்வேறு இதழ்களில் அணு சக்திக்கு எதிரான பதிவுகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார். சமாதானம் மற்றும் சுற்றுச்சூழலை முன்னிலைப்படுத்தும் கல்விச் சாலை ஒன்றினை மனைவியுடன் இணைந்து நாகர்கோவிலில் நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் சமூகப் பணி என்கிற தளத்தில் முன்னோடியாக இருப்பவர்களில் ஒருவரான ஒய்.டேவிட் தலைமையில், நாட்டின் பல்வேறு இடங்களில் இயங்கி வரும் அணுசக்திக்கு எதிரான இயக்கங்களை ஒன்று திரட்டி 2009-ல், 'அணு சக்திக்கு எதிரான இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு’ உருவாக்கப்பட்டது. தற்போது அதன் தலைவராக இருந்து, சுற்றுச்சூழலுக்காகவும் சக மனித நலனுக்காகவும் போராடி வருகிறார் நம் உதயகுமாரன்!

இவரின் வலைப்பூக்கள் :

http://conflict-care-reconciliation.blogspot.in/
http://dialogue-negotiation-mediation.blogspot.in/
http://drspudayakumar.blogspot.in/

நன்றி : கீற்று இணையதளம்.
பூவுலகு சுற்றுசூழல் இதழ் .

Thursday, February 23, 2012

ப்ளூடூத்

ப்ளூடூத் என்பது ஒரு கம்பியில்லாத் தொடர்பு முறை. பத்து மீட்டர் தூரம் வரை இம்முறையைப் பயன்படுத்தி கேபிள்கள் இல்லாத ஒரு தொலைத்தொடர்பை ஏற்படுத்த முடியும். அன்றாட மின்னணுவியல் வாழ்வில் நாம் பயன்படுத்தும் கருவிகளை கம்பிகளின்றி இணைக்க ப்ளூடூத் நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதன் தொழில்நுட்ப வரையறைகளைப் பார்ப்போமா?

அதிர்வெண்: 2.4 கிகாஹெர்ட்ஸ். இந்த அதிர்வெண் பட்டை ஐ எஸ் எம் பட்டை (ISM Band- Industry, Sceince, Medicine)- தொழில் , அறிவியல் மற்றும் மருத்துவப் பட்டை என்றழைக்கப்படுகிறது. இந்த அதிர்வெண்ணைப் பயன்படுத்த எவரிடமும் (அரசிடம்) அனுமதி பெறத்தேவையில்லை. தொழிலகங்கள், பல்கலைக் கழகங்கள் மற்றூம் மருத்துவ ஆராய்ச்சிகள் ஆகியவற்றிற்கென இந்த அதிர்வெண் பட்டை ஒதுக்கப்பட்டிருப்பதால் , இதெற்கென தனியாக அரசிடம் அனுமதி பெறாமலேயே இந்த அதிர்வெண்ணைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ப்ளூடூத் தொழில் நுட்பமும் இந்த அதிர்வெண்ணிலேயே இயங்குவதால் , ப்ளூடூத் கருவிகள் தயாரிப்பதும்,(உலகின் எந்தவொரு) பிற மின்னணுவியல் கருவிகளோடு எளிதில் தொடர்பு ஏற்படுத்துவதும் எளிதாகிறது.

வேகம்: வினாடிக்கு 1 மெகாபிட்ஸ் அதிகபட்ச வேகம்.

பயன்படுத்தபடும் நுட்பம்: அதிர்வெண் தாவல் பரவல் நிறமாலை முறை (Frequency Hopping Spread Spectrum). ஸி டி எம் ஏ (CDMA) நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த பரவல் நிறமாலைத் தொடர்புமுறை அமைக்கப்பட்டுள்ளது. அதிர்வெண் தாவல் என்றால் , கருவியின் செலுத்தி (Transmitter ) ஒரே அதிர்வெண்ணில் இயங்காமல் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் பட்டையிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட அதிர்வெண்ணில் இயங்குகிறது. இரு கருவிகள் அதிர்வெண் தாவல் முறையில் தொடர்பு கொள்கின்றதெனில் , அவ்விரு கருவிகளும், எந்த நேரத்தில் எந்த அதிர்வெண்ணைப் பயன்படுத்தி, தகவல்களை அனுப்ப/பெறப் போகின்றன என்பதை இரு கருவிகளும் முன்கூட்டியே முடிவு செய்து அதன் அடிப்படையில் தகவல் பரிமாற்றம் நிகழ்கிறது.

சரி, தொழில்நுட்பச் செய்திகள் போதும், பெயர்க்காரணத்துக்கு வருவோம். இதை ஏன் ப்ளூடூத் என்று அழைக்கிறார்கள், தமிழில் மொழி பெயர்த்தால், நீலப்பல் என்று வரும். நீலப்பல்லுக்கும் குறுந்தொலைவு கம்பியில்லாத் தொலைத் தொடர்புக்கும் என்ன சம்மந்தம்?

பத்தாம் நுற்றாண்டில் டென்மார்க் நாட்டை ஆண்டு வந்தவர் ஹெரால்டு ப்லூடன்ட் (Harald Bluetand) எனும் மன்னராவார். ப்லூடன்ட் என்றால், ஏறக்குறைய ப்ளூடூத் என்று பொருள் படுவதாகக் கூறுகிறார்கள். மன்னரின் பற்கள் ஒரு மாதிரியான நீல நிறத்தில் இருந்ததால் இப்பெயர் வந்ததெனக் கூறுவார்களும் உண்டு. சரி இவர் என்ன செய்தார்? நார்வே நாட்டில் குழப்பங்கள் ஏற்பட்டபோது , படையெடுத்துச் சென்று , நார்வே-யை டென்மார்க்குடன் இணைத்துக் கொண்டாராம். அதற்கும் ப்ளூடூத் நுட்பத்திற்குப் பெயரிட்டதற்கும் தொடர்பு உண்டா? வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ள நாடுகளை வென்று ஹெரால்ட் ப்லூடன்ட் தன்னாட்டுடன் இணைத்து , தன் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டு ஆட்சி செய்தார். அது போல் உலகின் வெவ்வேறு பகுதிகளில் , வெவ்வேறு தொழில் நுட்பங்களுடன் இயங்கும் பல மின்னணுவியல் கருவிகளைக் கம்பியில்லாமல் இணைக்க இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதால் இதற்கு ப்ளூடூத் என்று பெயர் வந்தது. நாமும் "நீலப்பல்" என்றெல்லாம் தமிழ்ப்படுத்தாமல் ப்ளூடூத் என்றே அழைக்கலாம்.

1994-ல் எரிக்ஸன் இத்தொழில் நுட்பத்தை முதலில் அறிமுகப்படுத்தியது. பின்னர் எரிக்ஸன், நோகியா, இன்டெல் , ஐ பி எம் மற்றும் தோஷிபா ஆகிய நிறுவங்கள் இணைந்து ப்ளூடூத் நுட்பத்திற்குச் செயல்வடிவம் கொடுத்தன. ப்ளூடூத் நுட்பத்திற்கான பொதுவான் வரையறைகள் தயாரிக்கப்பட்டு அவை நெறிப்படுத்தப்பட்டன. நாளடைவில் பிற நிறுவனங்களும் இத்தொழில் நுட்பத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தன, ப்ளூடூத் சிறப்பு ஈடுபாட்டுக் குழு ஒன்று ( Special Interest Group) அமைக்கப்பட்டது. தற்போது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவங்கள் இக்குழுவில் பதிவு செய்து கொண்டுள்ளன.

ஆக இடைச் செயலாக்கம் (InterOperability) என்பது இத்தொழில் நுட்பத்தின் முக்கிய அம்சங்களுள் ஒன்று. அதாவது ஒரு நிறுவனம் ப்ளூடூத் கருவிகளைத் தயாரிக்கிறது என்றால், அந்த ப்ளூடூத் கருவியைக் கொண்டு பிற நிறுவனங்கள் தயாரிக்கும் ப்ளூடூத் கருவிகளுடன் இணைத்துத் தகவல் பரிமாற்றம் செய்யும் வகையில் அந் நிறுவனம் தனது கருவிகளைத் தயாரித்துச் சந்தையில் விற்பனை செய்ய வேண்டும். ஒரு தொழில் நுட்பத்தின் வெற்றி இந்த இடைச் செயலாக்கத்தைப் பொறுத்தே அமைகிறது.

ப்ளூடூத் வரையறையில் (Specifications) இரண்டு பகுதிகள் உண்டு: அகப்பகுதி (Core) மற்றும் பயன்பாட்டுப்பகுதி ( Profile). அகப்பகுதியானது இந்தத்தொழில் நுட்பத்தின் மென்பொருள், வன்பொருள் எவ்வாறு வடிவமைக்கப்படல் வேண்டும் என்பதை விவரிக்கும் வரையறையாகும். எல்லாவிதமான ப்ளூடூத் கருவிகளும் இந்த அகப்பகுதியின் அடிப்படையிலேயே அமைந்தவை. இரண்டாவது பகுதியான பயன்பாட்டுப்பகுதி ( Profile) கருவிக்குக் கருவி வேறுபடும். ஒரு கருவி எதற்குப் பயன்படுத்த வேண்டுமோ அதற்கேற்றாற்போல் இந்தப் பயன்பாட்டுப்பகுதியை ப்ளூடூத் கருவிகள் வடிவமைக்க வேண்டும். உதாரணமாய், ப்ளூடூத் காதுபேசி ( Earphone) என்றால் அதற்குரிய பேசிப்பயன்பாட்டுப் பகுதி (Headset Profile) அக்கருவியில் இருக்க வேண்டும். கணினியில் இணைக்கப்பயன்படும் ப்ளூடூத் பொருத்தி ( Bluetooth Adaptor) எனில், கோப்புகளை மாற்றும் பயன்பாட்டுப்பகுதி (File Transfer Profile) அக்கருவியில் இருக்க வேண்டும்

Thursday, February 9, 2012

Wi-Fi என்றால் என்ன?



"ஒயர்லெஸ் ஃபிடெலிடி" என்ற தொழில் நுட்பம்தான் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN)) என்று அழைக்கப்படும்நெட்வொர்க்குகளின் ஒரு சில வகைகள் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. அதாவது நெட்வொர்க்குகளுக்கும், கணினி, இணையதளஇணைப்புகளுக்குமான கம்பிவட தொழில் நுட்பத்திற்கு அடுத்தகட்டமாக இந்தகம்பியற்ற இணைப்புத் தொழில்நுட்பம் தற்போது வெகு வேகமாகபரவலாகிவருகிறது.

முறையான பாதுகாப்பு, தடுப்பு ஏற்பாடுகள் இல்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கை யார் வேண்டுமானாலும் அனுமதியின்றி பயன்படுத்தி எந்தவிதமான நாசவேளைகளிலும் ஈடுபடலாம் என்பதே தற்போது எழுந்துள்ள அச்சம்.

இந்தியா தற்போது தகவல் தொடர்பியலில் புரட்சியை எதிகொண்டு வருகிறது. மிகப்பெரிய செல்பேசி சந்தையாக இந்தியா வளர்ந்து வரும் நிலையில் இந்ததொழில் நுட்பமும் இந்தியாவில் அதிக வளர்ச்சியை பெறும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வர்த்தகத் துறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், இதனால் மக்கள்வாழ்முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றால் கணினிகள், லேப்டாப்கள், அடுத்த தலைமுறை அதி தொழில் நுட்ப ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும்பிற கைவழி பயன்பாட்டு மின்னணுக் கருவிகளின் தேவை கணிசமாக பெருகிவருகிறது. இதனுடன் சேர்ந்து 24 மணி நேர இணைப்புச் சேவை, பரவலானவிரிவலை (பேண்ட்வித்) ஆகியவற்றிற்குமான தேவைகளும் கூடி வருகிறது.

இந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுக்ககூடிய ஒரு தொழில் நுட்பமான Wi-Fi தொழில்நுட்பம் தற்போது இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வீடுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில்விரும்பத்தகுந்த ஒரு இணைப்புத் தொழில்நுட்பமாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது.

இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கிய Wi-Fi அலையன்ஸ் நிறுவனத்தின்கணிப்பின்படி தற்போது Wi-Fi தொழில் நுட்பத்திற்கான இந்திய சந்தை 270 மில்லியன் டாலர்கள். 2011-12ஆம் ஆண்டுவாக்கில் இது 900 மில்லியன் டாலர்கள்சந்தையாக வளர்ச்சியடையும்.

ஆனால்... இந்த தொழில் நுட்பம் பல பாதுகாப்பு கவலைகளையும், அச்சுறுத்தல்களையும் அளிக்க துவங்கியுள்ளது. சமீபத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு குறித்து விசாரணை மேற்கொள்கையில், பாதுகாப்பு நிறுவனங்கள், இதற்கு காரணமான ஒரு மின்னஞ்சலை கண்டுபிடித்துள்ளது. அதனை பின்பற்றிச்செல்கையில் கென் ஹேவுட் என்ற அமெரிக்க குடிமகனின் கணினிக்குஇட்டுச் சென்றுள்ளது.

அதாவது அந்த அமெரிக்கக் குடிமகனின் கணினி ஹேக் செய்யப்பட்டு அதன்வழியாக இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், இந்த தொழில் நுட்பம்நம்மிடையே சில கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.


அதாவது சரியாக கண்காணிக்கவில்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கில் உள்ளகுறைபாடுகளினால் ஹேக்கர்கள் எந்த ஒரு கணினி நெட்வொர்க்கிலும் புகுந்துநாச வேலைகளில் ஈடுபடமுடியும். இதனால் இதன் பயனாளர்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய கட்டாயம் பிறந்துள்ளது .


இதற்காக, வெள்ளை அறிக்கை ஒன்றையும் மஹிந்திரா ஸ்பெசல் சர்வீசஸ்குழுமம் (MSSG) வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்: "சிறப்பான பாதுகாப்பு செயல்முறைகள் - Wi-Fi -யின் அபாயங்கள் என்று அந்தவெள்ளை அறிக்கை தலைப்பிடப்பட்டுள்ளது.

Wi-Fi
தொழில் நுட்பத்தினால் இணையதளம் உள்ளிட்ட இணைப்புகளில்நடந்துள்ள புரட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல் வீடுகள் வரை அதன் மீது ஈர்ப்பை அதிகரித்துள்ளது. அதன் பயனும், திறனும் மற்ற கம்பிவட இணைப்பு நெட்வொர்க்குகளை விட அதிகமானது. ஆனால் இது எவ்வளவு பயனுள்ளதோ அந்த அளவிற்கு பாதுகாப்பு அபாயங்கள் நிறைந்தது. எனவே இந்த குறிப்புகள் சிறந்த தடுப்பு உத்திகளை மேற்கொள்ள பயனுள்ளதாக அமையும்.

கம்பியற்ற இணைப்பு உங்கள் நெட்வொர்க்கை அடைய ஒரு பின்வாசல் வழி!

ஒயர்லெஸ் ஆக்சஸ் கார்டுகளின் மூலம் இயங்கும் லேப் டாப்கள், தானியங்கி இணைப்பு அமைப்புகள் ஆகியவை தற்போது பெருகி வருகிறது. அதாவது ஒயர்லெஸ் இணைப்பு பெற்றுள்ளவர்கள் தகவல்களை வான்வழியாக அனுப்புவதால், அதனை ஹேக் செய்வது சுலபம், அதாவது யார்வேன்டுமானாலும் அதனை பார்க்க முடியும். இதானல் ஹேக்கர்கள் எங்கிருந்தபடி வேண்டுமானாலும் நிறுவனங்களின் நெட்வொர்க்குகள் மட்டுமல்லாது ஒரு நாட்டின் பாதுகாப்பை தீர்மானிக்கும் ராணுவ சம்பந்தமான விஷயங்களையும் தகவல்களையும் வெளியிலிருந்தே அணுக முடியும்.


என்ன தவறு ஏற்பட முடியும்?

எதேச்சையாக அணுகுதல், அதாவது இதில் ஒரு பயனாளர் அடுத்ததாக உள்ளஒரு நிறுவனத்தின் ஊடுருவும் ஒயர்லெஸ் நெட்வொர்க் மூலம் ஒயர்லெஸ்அணுகல் புள்ளியைக் கைப்பற்றி அங்கிருந்து தகவல்களை திருடி என்னவேண்டுமானாலும் செய்யலாம்.

கெட்ட நோக்கத்துடன் அணுகுதல், இதில், ஹேக்கர்கள் ஒரு பொய்யானஅணுகல் இடங்களிலிருந்து தாங்கள் உருவாக்கிய ஒயர்லெஸ் கருவிகள் மூலம்எந்த ஒரு நெட்வொர்க்கையும் ஆட்கொண்டு, அதன் வழி செல்லும் தகவல்களைதிருடுவது.

தற்காலிக நெட்வொர்க்குகள், இதில் ஒயர்லெஸ் கணினிகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்துவது, அதாவது ஒயர்லெஸ் அணுகல் இடம் என்ற ஒன்றுஇல்லாமலேயே.

உங்கள் ஒயர்லெஸ் அணுகல் புள்ளி ஒரு குறிப்பிட்ட பகுதியை பரவலாகக்கொண்டு இயங்குவதால் நீங்கள் ஒயர் மூலம் அனுப்பும் செய்திகள் மற்றும்கார்ப்பரேட் தரவுகளை (datas) தொலைதூரத்திலிருந்தே அணுக முடிவது.

இதனைத் தடுக்க உடனடியாக செய்ய வேண்டியது என்ன?
ஒயர்லெஸ் கருவி அட்மினிஸ்ட்ரேட்டர் தான்தோன்றி கடவுச்சொல்லைஉடனடியாக மாற்றவும். உதாரணமாக ரீ செட் 123 அல்லது அது போன்ற பிறபொதுவான கடவுச்சொல் தானாகவே உங்கள் கணினியில் இருந்தால் அதனைஉடனடியாக மாற்றி வேறு கடவுச்சொல்லை வைக்கவும்.
உங்கள் ஒயர்லெஸ் கருவி பயன்படுத்தக்கூடிய WPA/WEP பாதுகாப்புகுறியேற்றங்களை எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும்.

பயனில் இல்லாத போது Wi-Fi மீடியாவின் இயக்கத்தை நிறுத்தி வைப்பது நல்லது. அல்லது பிளக்கை பிடிங்கி வைப்பதும் சிறந்தது.

MAC
முகவரி வடிக்கட்டி அமைப்பை ஏற்படுத்தி அதிகாரபூர்வ கருவிகளுக்குமட்டுமே இணைப்பை அனுமதிக்கவும்.

தானாகவே உள்ள சர்வீஸ் செட் ஐடென்டிஃபையர் (எஸ்.எஸ்.ஐ.டி.)ஐ உடனடியாகமாற்றவும்.

தேவையில்லை என்றால் எஸ்.எஸ்.ஐ.டி. ஒலிபரப்புகளை நிறுத்தி விடுங்கள்.
திறந்த Wi-Fi நெட்வொர்க்குகளை தானாகவே இணைக்கும் அமைப்பின்இயக்கத்தை நிறுத்தி வைக்கவேண்டும்.

உங்கள் ஒயர்லெஸ் பாதைகள் அனைத்திலும் ஃப்யர்வால்களை (Firewalls) உருவாக்கவும்.

உங்கள் வளாகத்தின் மையப்பகுதியில் உங்கள் ஒயர்லெஸ் அணுகள் இடத்தைவையுங்கள். சுவற்றிலோ மூலைகளிலோ வைத்தால் கசிவுகள் ஏற்படும்.

இந்த குறிப்புகள், தனிப்பட்ட பயனர்களுக்கு ஓரளவிற்கு பொருந்தகூடியது. நிறுவனஙளும், அமைப்புகளும் இதனை பரந்துபட்ட அளவில்மேற்கொள்ளவேண்டியிருக்கும். ஒரே படித்தான பாதுகாப்பு முறைகளை இவைகடைபிடிக்க வேண்டும்.

நன்றி : தேன் தமிழ்