Friday, October 11, 2013

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு







           

               கடந்த 24 ஆண்டுகளாக ரன் குவிக்கும் எந்திரமாக இயங்கி வந்த சச்சின் டெண்டுல்கர், தனது 200-வது டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்துள்ள சச்சினை, டெஸ்ட் போட்டியில் மட்டும் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. சச்சினின் 200-வது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து, ஆடுகளத்தில் தனக்கே உரித்தான பாணியில் விளையாடும் சச்சினை ரசிகர்கள் காண முடியாது.
தனது ஓய்வு குறித்த அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் சச்சின் வியாழக்கிழமை தெரிவித்தார்.
198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 15, 837 ரன்களைக் குவித்துள்ள சச்சின், "கிரிக்கெட் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பதற்கு கடினமாக உள்ளது' என்று மனம் உருகித் தெரிவித்துள்ளார்.

தனது ஓய்வு அறிவிப்புக்குப் பின் அவர் கூறியது:
என்னுடைய வாழ்க்கை முழுவதும் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றே கனவு கொண்டிருந்தேன். கடந்த 24 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் அதே கனவுகளுடன் வாழ்ந்து வந்தேன். எனது 11 வயது முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். கிரிக்கெட் விளையாடாத வாழ்வை நினைத்துப் பார்ப்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது.
எனது தாய் நாட்டின் சார்பில் உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாடியதை பெரும் கெüரவமாகப் பார்க்கிறேன். சொந்த மண்ணில் விளையாட உள்ள 200-வது டெஸ்ட் போட்டியை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்.
எனது மனசாட்சி அனுமதிக்கும் வரை, என்னை கிரிக்கெட் விளையாட அனுமதித்த கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். என்னை புரிந்து கொண்டு, பொறுமையுடன் காத்திருந்த எனது குடும்பத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். அனைத்தையும்விட, நான் நன்றாக விளையாட வேண்டும் என்று பிரார்த்தனை நடத்திய ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
சதங்கள் அதிகரிக்குமா? டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் சச்சின் இதுவரை 100 சதங்களை அடித்துள்ளார். கடைசியாக விளையாட உள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் பேராவல் கொண்டுள்ளனர்.
சொந்த மண்ணில் சாதனை: 198 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ள சச்சின், மேலும் 2 டெஸ்ட் போட்டிகள் விளையாடினால் 200 டெஸ்ட் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை பதிவு செய்ய உள்ளார். இந்த சாதனை, தென் ஆப்பிரிக்க தொடரில் சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் டெஸ்ட் மட்டும் ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதனால், 200 டெஸ்ட் போட்டியை தனது தாய் நாட்டிலே விளையாடும் வாய்ப்பை சச்சின் பெற்றார்.
எங்கே 200-வது டெஸ்ட்?: 200-வது டெஸ்ட் போட்டியை சச்சினின் தனது சொந்த மாநிலத்திலேயே விளையாட வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில கிரிக்கெட் சங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. அதேபோல, தங்கள் மாநிலத்தில் விளையாட வேண்டும் என்று மேற்கு வங்க கிரிக்கெட் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் விளையாடும் டெஸ்ட் போட்டிகள் எங்கு நடைபெறுகிறது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
ஆனால், தற்போது சச்சின் ஓய்வு முடிவை அறிவித்துள்ளதால், அவரைக் கெüரவப்படுத்தும் வகையில், மகாராஷ்டிரத்திலேயே அவரது 200-வது டெஸ்ட் போட்டி வரும் வகையில் பிசிசிஐ அட்டவணை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறே போட்டி அட்டவணை வெளியிடப்பட்டால், அவரது இறுதி டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 14-ம் தேதி நடைபெறும்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்தவர்கள்
வீரர் போட்டிகள் இன்னிங்ஸ் சதங்கள் அதிகபட்சம்
சச்சின் (இந்தியா) 662 780 100 248*
பாண்டிங் (ஆஸ்திரேலியா) 560 668 71 257*
காலிஸ் (தென் ஆப்பிரிக்கா) 508 604 61 224
லாரா (மேற்கிந்தியத் தீவுகள்) 430 521 53 400*
சங்ககாரா (இலங்கை) 516 574 49 287
திராவிட் (இந்தியா) 509 605 48 270
ஜெயவர்த்தனே (இலங்கை) 590 658 48 374
ஜெயசூர்யா (இலங்கை) 586 651 42 340
ஹைடன் (ஆஸ்திரேலியா) 273 348 40 380

டெஸ்ட்: பேட்டிங்
அறிமுகம்: 1989-பாகிஸ்தான்
போட்டிகள் : 198
இன்னிங்ஸ் : 327
நாட் அவுட் : 33
ரன்கள் : 15,837
அதிகபட்சம் : 248*
சராசரி : 53.86
சதம் : 51
அரை சதம் : 67

பந்து வீச்சு
இன்னிங்ஸ் : 142
விக்கெட்டுகள் : 45
சிறந்த பந்து வீச்சு : 3வி/10

ஒருநாள்: பேட்டிங்
அறிமுகம்:1989-பாகிஸ்தான்
கடைசி:2012-பாகிஸ்தான்
போட்டிகள் : 463
இன்னிங்ஸ் : 452
நாட் அவுட் : 41
ரன்கள் : 18,426
அதிகபட்சம் : 200*
சராசரி : 44.83
சதம் : 49
அரை சதம் : 96

பந்து வீச்சு
இன்னிங்ஸ் : 270
விக்கெட்டுகள் : 154
சிறந்த பந்து வீச்சு : 5வி/32

இருபது ஓவர் பேட்டிங்
போட்டி : 1
இன்னிங்ஸ் : 1
ரன் : 10
அதிகபட்சம் : 10
சராசரி : 10.00

பந்து வீச்சு
இன்னிங்ஸ் : 1
விக்கெட் : 1
சிறந்த பந்து வீச்சு : 1வி/12

ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்த சதங்கள்
அணிகள் டெஸ்ட் ஒருநாள்
ஆஸ்திரேலியா 11 9
இலங்கை 9 8
தென் ஆப்பிரிக்கா 7 5
நியூஸிலாந்து 4 5
இங்கிலாந்து 7 2
ஜிம்பாப்வே 3 5
பாகிஸ்தான் 2 5
மேற்கிந்தியத் தீவுகள் 3 4
வங்கதேசம் 5 1
கென்யா - 4
நமீபியா - 1

Monday, September 16, 2013

சர்வதேச ஓசோன் தினம் 16.09.2013

           சூரியனின் கதிர்களில் உயிர்ச் சூழலுக்குத் தீங்கு விளைவிக்க கூடிய புற ஊதாக் கதிர்களும், அகச் சிகப்புக் கதிர்களும் புவியை வந்தடையா வண்ணம் அவற்றினை உறிஞ்சி எடுத்துக் கொண்டு உயிர்ச் சூழலுக்கு நன்மை பயக்கக் கூடிய கதிர்களை தேவையான அளவு புவிக்கு வழங்குகின்ற ஓரு படலமே ஓசோன் படலமாகும். இவ் ஓசோனில் ஏற்பட்டுள்ள துவாரமே இன்று ஜீவராசிகள் எதிர் நோக்குகின்ற மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும்.
இவ் ஓசோன் படலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் 1987 செப்ரெம்பர் 16 இல்  கனடாவில் உள்ள மொன்றியலில் பல நாடுகளின் பிரதி நிதிகள் ஒன்றிணைந்து ஓசோன் படையின் அழிவைத் தடுக்க சர்வதேச ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொண்டனர். இதில் இருபத்திநான்கு நாடுகள் கைச்சாத்திட்டன. அத்தினமே, 1995 ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஓசோன் தினமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
Ozone_001
புவியைச் சுற்றி பல்வேறு வாயுக்களைக் கொண்டிருக்கும் படையே வளிமண்டலம் ஆகும். புவியினுடைய ஈர்ப்புச் சக்தியினாலேயே இவ் வளிமண்டலம் புவியைச் சுற்றிக் காணப்படுகின்றது. வளிமண்டலமானது மாறன்மண்டலம், படைமண்டலம், அயணமண்டலம் என்ற படைகளைக் கொண்டு காணப்படுகின்றது. மாறன்மண்டலத்திற்கும், படைமண்டலத்திற்கும் இடையே 12 – 45 கிலோமீற்றர் வரையான ஸ்ட்ரட்ரோ ஸ்பியர்  பிரதேசத்தினுள்  காணப்படும் மென்படையே ஓசோன்படை எனலாம். ஒரு மெல்லிய புகைமண்டலம் போல ஓசோன் இங்கு பரவிக் காணப்படுகின்றது. அடர்த்தி குறைந்த ஒரு வாயு ஓசோன் ஆகும். இப் பகுதியில் இயல்பாக உள்ள ஒட்சிசன் மூலக் கூறு மீது சூரியனின் புறஊதாக் கதிர் வீச்சு தாக்குதல் ஏற்படுத்தி இரண்டு ஒட்சிசன் அணுவாகப் பிரிக்கப்பட்டு, பின் இந்த அணுக்கள் ஒட்சிசன் மூலக் கூற்றுடன் இணைந்து ஓசோன் (O3) வடிவமாக உருவாகின்றது. ஓசோனை முதன் முதலாகக் கண்டறிந்தவர் சி.எப் ஸ்கோன்பின் என்பவராவர்.
Ozone_002
ஓசோன் அமைந்துள்ள மாறன்மண்டலமே புவியின் வானிலை, காலநிலை நிலைமைகளுக்கு முக்கியமானதாகும். இப்படையானது சூரியனில் இருந்து வீசப்படும் புறஊதாக் கதிர்களிடமிருந்து பாதுகாப்புக் கவசமாகச் செயற்படுகின்றது. வளிமண்டலத்தில் ஓசோனின் அடர்த்தியை டாப்சன் அலகினால் அளவிடுகின்றனர். ஓசோனின் அடர்த்தியை கணக்கிட பத்தொன்பது வகையான கருவிகள் உள்ளன. அவற்றுள் டாப்சன் ஸ்பேக்ட்டோ மீற்றர், ப்ருவர் ஸ்பேக்ட்டோ போட்டோ மீற்றர், ஜோடு மீற்றர், பில்டர் ஓசோன் மீற்றர் எம்.83, பில்டர் ஓசோன் மீற்றர் எம்.124, மாஸ்ட், ஆக்ஸ்போட்டு, சர்பேஸ் ஓசோன் பப்ளர், எலக்ட்ரோ கெமிக்கல் செல் சோன்ட் என்பவை சிலவாகும்.
Ozone_003
அறிவியலாளர்கள் 1920 இல் ஓசோன் படலத்தைக் கண்டுபிடித்த காலத்தில் இருந்து அதன் இயற்கை அமைப்பு, மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 1974 இல் சேர் வூட்ரொலன்ட் மற்றும் மரியா மொலினா என்போர் மனித செற்பாடுகளினால் ஓசோன்படைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர். ஓசோன் படையில் துவாரமேற்பட்டிருப்பது தொடர்பாக 1982 ஆம் ஆண்டு அந்தாட்டிக்காவின் “கலிபே” என்ற இடத்தில் ஆராய்ச்சி நடாத்திய பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். உறைபனிக் காலத்தில் துவாரங்கள் தோன்றுவதாக NIMBUS 7 எனும் செயற்கை செய்மதியினால் கண்டறியப்பட்டது. 1984 ஒக்டோபர் மாதம் மீண்டும் ஆராய்ந்த போது முன்னரிலும் பார்க்க 30 வீதம் விரிவடைந்திருந்தமை கண்டறியப்பட்டது.
Ozone_004
ஓசோனைத் தேய்வடையச் செய்யக் கூடிய பொருட்களை வெளியிடுதலே ஓசோன் படையின் அழிவிற்கு (Ozone Depleting Substances) காரணங்களாக உள்ளன. இப் பொருட்கள் பிரதானமாக மனிதனின் செயற்பாடுகளினாலேயே வளிமண்டலத்தில் கலக்கின்றன. இவ் ஊறுவிளைவிக்கும் பொருட்கள் கைத்தொழில் விவசாய நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்படுகின்றது. குறிப்பாக குளோரோ புளோரா காபன் (CFC Chloro floro carban),   கார்பன் தெட்ராகுளோரைட் (Carbon Thetrachlorite), ஐதரோ குளோரோ புளோரோ காபன் (HCFC), மற்றும் மெதில் புரோமைட் (Methil Bromite), போன்றவை பிரதானமாக ஓசோன் தேய்விற்குப் பொறுப்பாய் உள்ளன.
ஓசோன் தேய்வானது அதற்கு சேதம் விளைவிக்கும் பொருட்களால் வெளியேற்றப்படும் (ODS Ozone Depliting Substances) பிரதேசத்திற்கோ அல்லது குறிப்பிட்ட இடத்திற்கோ சேதத்தினை ஏற்படுத்துவதில்லை. உலகின் அனைத்து மக்களுமே அதன் தாக்கத்திற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. மானிடக் காரணிகள் (Anthropogenic) மூலம் வெளிவிடப்படும் பொருட்கள் ஓசோனின் அழிவைத் துரிதப்படுத்தி, இயற்கை சமநிலை குலைகின்றது.
Ozone_005
இவ் ஓசோன் படையின் அழிவுக்கான காரணங்கள் பற்றி நோக்குகையில், நாம் அன்றாடம் பாவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் அதிலிருந்து வெளியேறும் புகை  ஓசோன் மண்டலத்தில் ஒரு படையாகப் படிந்து தாக்கம் புரிகின்றது. அத்துடன் குளிர்சாதனப்பெட்டிகள், குளிரூட்டிகள் என்பனவற்றில் இருந்து வெளியேறும்  CFC இதற்குப் பெருமளவு பங்களிப்புச் செய்கின்றது. வர்ணப் பூச்சுக்கள், இலத்திரனியல்  கைத்தொழில்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயுக்கள், துப்பரவாக்கல் செயன்முறைக்குப் பயன்படுத்தப்படும் ஒரு திரவம், ஐரோப்பிய நாடுகளில் கோதுமைத் தானியத்திற்கு தெளிக்கப்படும் பூச்சி நாசினிகள், அதிவேக விமானங்கள், அணுப் பரிசோதனை போன்றவை ஓசோன் படலத்தில் பாதிப்பினை ஏற்படுத்தி விடுகின்றது. இதனை விட ஏனைய வாயுக்களும் இதில் பங்களிப்புச் செய்கின்றது.
Ozone_006
ஹொலோன், மெத்தில் புரொமைஸ், காபன் மெற்றா குளோரைட், மெத்தில் குளோரோ போம் என்பனவும் ஹைரோகாபன்களாகும். அவற்றின் அழிவுகளின் மூலம் கிளோரித், பிரோமித் போன்ற ஹெசவின் பிரிவொன்றும் உருவாகும். இவை மண்ணிலிருந்தும் கடல், நீராவி என்பவற்றில் இருந்தும் வெளிப்படுகின்றது. இது தவிர இயற்கையாக எரிமலைகள், பருவமாற்றங்கள், சூரியவட்டம், காற்றின் வேகம் இவற்றினாலும் ஓசோன்படை பாதிப்படைவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கைத்தொழில் பேட்டைகளில் இருந்து உருவாகும் சூழலை மாசுபடுத்தும் வாயுக்களாக குளோரோ புளோரா காபன், மெதேன், நைதரசன் ஒக்சைட் போன்ற வாயுக்கள் 100 – 125 ஆண்டுகள் வரை வளிமண்டலத்தில் நிலைத்திருக்கும் தன்மை வாய்ந்தன. எனவே, இவை படிப்படியாக ஓசோன் படலத்தில் உள்ள ஓசோன் மூலக்கூறுகளுடன் தாக்கமடைந்து சுயாதீன ஒட்சிசன் மூலக்கூறுகளை உருவாக்கி ஒட்சிசன் படலத்ததைப் பிரிகையடையச் செய்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
Ozone_007
கீழ் வளிமண்டலத்தில் இப் பொருட்கள் எமது சுற்றாடலுக்கு எது வித தாக்கங்களையும் ஏற்படுத்தாது. எனவே கைத்தொழிலுக்காக இவற்றின் பாவிப்பு அதிகளவாகக் காணப்படுகின்றது. எனினும் இவை சுற்றாடலில் கலந்ததன் பின்பு கீழ் வளிமண்டலத்தில் உள்ள ஏனைய வாயுக்களும் தாக்கங்களை ஏற்படுத்தாது. படிப்படியாக மேல் வளிமண்டலம் வரை இந்த வாயு, அதிகளவான சக்தியினை சூரிய ஒளிக்கதிர்கள் ருஏ (Ultra Violet) உடன் ஒன்றிணைந்து கிளோரின் அல்லது பிராமிக்த் ஹெலயிட் ஓசோனுடன் செயற்பட்டு கிளோரின் அல்லது பிரோமின் மொனோ ஒக்சைட்டின் உற்பத்தி செய்யும். இங்ஙனமாக உற்பத்தியாகும் அணுக்கள் மீண்டும் சிதறி ஹெலயிட் அணுவினை அழிக்கும். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறும். இதன் மூலம் தொடர்ச்சியாக ஓசோன் அணுக்கள் அழிக்கப்படும் என விஞ்ஞானிகளின் ஆய்வுகளின் பிரகாரம் கண்டறிந்துள்ளனர். ஒரு கிளோரிக் அணுவிற்கு ஒரு  மில்லியன் ஓசோன் அணுக்கள் குறைவதினால் ஓசோன் படலத்தின் தடிப்புக் குறையும். எனவே, இங்ஙனம் ஓசோன் படலத்தின் தடிப்பு குறைதலை ஓசோன் துவாரம் என அழைப்பார்கள். ஓசோன் துவாரத்திற்கான காரணத்தை ஆராய்ந்து முன்மொழிந்தவர் அமெரிக்க இரசாயனவியலாளரான சேர்.வூட்ரவ்லண்ட் என்பவராவார்.
Ozone_008
ஓசோன் துவாரத்தின் தற்போதைய நிலையினை ஆய்வாளர்கள் செயற்கைக் கோளின் துணையுடன் ஆராய்ந்து வருகின்றனர். அந்தாட்டிக்காவில் ஓசோன் துவாரத்தின் பரப்பு 1980 ஆம் ஆண்டு முதல் கணக்கிடப்பட்டுள்ளது. ஓசோன் துவாரத்தின் பரப்பு ஆகஸ்ட் மாதத்தில் 10 மில்லியன் ச.கி.மீ அளவில் ஆரம்பித்து செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அதிக அளவிற்கு விரிவடைந்து நவம்பர் மாத இறுதியில் குறைய ஆரம்பித்து, டிசம்பர் முதல் வாரத்தில் ஓசோன் துவாரம் முழுமையாக மறைந்து விடுகின்றது. கடந்த பத்தாண்டுகளில் ஓசோன் துவாரத்தின் பரப்பு அதிகபட்ச நிலையில் 25 மில்லியன் ச.கி.மீ ஆக இருந்த நிலைமாறி, 2000 ஆம் ஆண்டில் 28.3 மில்லியன் ச.கி.மீ ஆக அதிகரித்திருந்தது. இந்த பரப்பளவு அவுஸ்ரேலியாவின் பரப்பளவினை போல் மூன்று மடங்காகும். ஆனால் 2002 ஆம் ஆண்டில் இதன் பரப்பளவு வெகுவாகக் குறைந்து 15 மில்லியன் ச.கி.மீ ஆக இருந்தது. இது கடந்த இருபது ஆண்டுகளில் மிகக் குறைந்த பரப்பளவு கொண்ட ஓசோன் துவாரம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
Ozone_009
ஓசோனில் ஏற்பட்டுள்ள துவாரத்தினால் உயிர்ச்சுழலுக்கு  பொருத்தமற்ற ஒளிக்கதிர்கள் புவியை வந்தடைகின்றன. இதனால், மனிதனுக்கு பல விதமான நோய்கள் ஏற்படுகின்றது. அதாவது, தோல்புற்று நோய், கண்களில் வெள்ளை உண்டாதல், அதன் மூலம் கண்பார்வை அற்றுப்போதல், மனிதனின் நோய்த் தடுப்பு முறைகளில் தாக்கங்கள் ஏற்படுதல், நோய்த்தடுப்பு, உடல் சக்தி குறைதல் போன்றவையாகும். இதனைவிட தாவரங்களின் வளர்ச்சி குன்றுதல், அவற்றின் பலாபலன்கள் குறைதல், மீன் இனம், ஊர்வன ஆகியவற்றின் முட்டைகள் மிக விரைவாக அழிவடைதல், UV கதிர்களின் வீச்சினால் அப்பகுதிகளில் உள்ள மீனின் உணவுகளான பிளான்டன்கள் அழிவடைதல் ஆகியவைகளினால் கடலில் பிடிக்கப்படும் மீன்களின் வளம் குறைவடைந்துள்ளது.
Ozone_010
CFC வாயுவும், காபன்டைஸ் ஒட்சையிட் வாயுவும் அதிகளவான சக்தியினை கொண்டவையாகும். இந்த வாயுவின் முக்கிய தொழிற்பாடு வெப்பத்தினை சீராக வைத்திருத்தலாகும். இவ்வகையான வாயு ஒன்று பாச்சப்படுதலின் காரணமாக வளிமண்டலத்தின் வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால் முனைவுப் பனிப்படலங்கள் உருகி, கடல் மட்டம் உயர்வடைந்துள்ளது. காலநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இங்ஙனமாக ஒன்றொடொன்று தொடர்புடைய சுற்றாடல் பிரச்சினைகள் அதிகளவு ஓசோன் படையின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ளது. எவ்விதத்திலும் ஓசோன் படலத்தின் சிதைவின் இறுதிப் பிரதிபலன் பூமியில் வாழும் சகல உயிரினங்களினதும் அழிவாகும்.
Ozone_011
ஓசோன் படையானது புவியிற்கும் அதன் உயிரியல் முறைமைக்கும் பாதுகாப்புக் கவசமாகத் தொழிற்படுகின்றது. ஓசோன் வாயுவிற்கு பங்கம் ஏற்படுத்தும் பொருட்களைப் பாவனையில் இருந்து நீக்கிவிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது, குளிரூட்கள், கொலோன்  உற்பத்திக்கு CFC க்கு பதிலாக மாற்றுப் பொருட்களாக ஓசோன் விரும்பத்தக்க HFC (ஹய்ரோ புளோரோக் காபன்), வகைகளைப் பாவித்தல். தெளிபொருளாக ஹய்ரோ காபன் பாவித்தல், கமத்தொழிலுக்கு பாவிக்கப்படும் மெத்தில் போமலிங் பதிலாக வேறு பாவனைகளை மேற்கொள்ளுதல்.  தீயணைக்கும் கருவிகளில் பயன்படுத்தப்படும் காபன்டைன் ஒட்சைட் போன்ற மாற்றுப் பொருட்களைப் பாவித்தல், வளர்முக நாடுகளில் வெளியேற்றப்படும் CFC உள்ளடங்கலான பொருட்களை இறக்குமதி செய்வதை தடுப்பதற்காக முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளல் போன்றன இன்று செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
Ozone_012
ஓசோன் படையின் பாதுகாப்புத் தொடர்பாக 1976 இல் ஐ.நாவின் சுழல் திட்ட கூட்டத்தில் ஆராயப்பட்டது. 1977 இல் இது குறித்து வல்லுனர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஓசோன் படலப் பாதிப்பைத் தொடர்ந்து மதிப்பீடு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டமும், உலக நிலவிய அமைப்பும் சேர்ந்து ஓசோன் படலத்திற்கான ஒருங்கிணைப்பு குழுவை அமைந்தனர். ஓசோனைப் பாதிக்கும் நிலைகளைத் தடுப்பதற்கான உலக நாடுகளிடையே ஒரு அனைத்துலக உடன்பாட்டை ஏற்படுத்துவதற்கான முயற்சி 1981 இல் தொடங்கியது. அத்துடன் 1985 மார்ச்சில் நடைபெற்ற வியன்னா மாநாடு முடிவுகள் உலக நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதனையடுத்து 1987 இல் கனடாவில் ஓசோன் படலத்தைப் பாதிக்கும் பொருட்கள் குறித்து,  மொன்றியல் ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது தொடர்பான மாநாடுகள் 1990 இல் லண்டனிலும், 1992 இல் கெர்பன்கேகளிலும் நடத்தப்பட்டது. 1995 இல் CFC இனை நிரத்திரமாகத் தடைசெய்வதற்கான ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கைச்சாத்திட்டன. ஆனால் இப்பிரச்சினை இதனுடன் தீர்ந்து விடவில்லை. CFC இன் பயன்பாட்டை ஐரோப்பிய சமூகம் 2015 ஆம் ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று குரலெழுப்பி வருகின்றது.
Ozone_013
1990 களில் சுவிஸ்லாந்தில் சுமார் 52.8 மில்லியன் தொன் பாதகமான வாயுக்கள் வெளியிடப்பட்டதாக அறியப்பட்டுள்ள போதும், 2008 ஆம் ஆண்டில்; 48.4 தொன்னாக குறைவடைந்துள்ளது. ஓசோன் படலத்தை பாதுகாக்கும் வகையில் சுவிசில் புதிய திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். 2012 ஆம் ஆண்டில் சுற்றாடலுக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடிய வாயு வெளியேற்றத்தை குறைக்க முடியுமென நம்பிக்கை வெளியிடப்படுள்ளது.
Ozone_014
மொன்றியல் சாசனத்தின் மூலம் ஓசோனின் மீள் உற்பத்தி நடவடிக்கையினை ஊக்குவிக்கும் தொழிற்பாடுகள் செயற்படுத்தப்படுகின்றன. கைத்தொழில் குழுக்கள் சூழல் – நட்பு முறையிலான பாதுகாக்கப்பட்ட மாற்று முறைமைகளைக் கையாள முனைந்து வருகின்றன. தொழில்நுட்பத்தின் ஊடாக மாற்று திட்டங்களை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் அமுல்படுத்துவதினை ஊக்குவித்து வருகின்றன. மொன்றியல் பிரகடனத்தில் கைச்சாத்திட்ட நாடுகளும்  சாசனத்தில் உள்ள இலக்குகளுக்கு கட்டுப்பட்டிருப்பது, சூழல் நட்புத் தொழில்நுட்பத்திற்கு நன்மை பயப்பித்துள்ளது. தேசிய ரீதியாக இது தொடர்பான சட்ட அமுலாக்கங்கள் தேசிய ஓசோன் அமைப்பினால் (National Ozone Unit) செயற்படுத்தப்படுகின்றது. இலங்கையில் அனைத்துலக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குறியீட்டு முறைமை (Coding) Harmonized System  (H.S Code) ஒன்றினை ODS பொருட்களின் இறக்குமதியினை கண்காணிப்பதற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை CFC அல்லது ODS இனை அடிப்படையாக வைத்த உபகரணங்களை தற்போது உற்பத்தி செய்யவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Ozone_015
உலகிற்கே பாதுகாப்பு படையாகக் காணப்படும் இவ் ஓசோன் படையானது மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது. இதன் உண்மையினைப் புரிந்து கொண்டு அனைத்துலக நாடுகளும் தமது சுயாதீன சிந்தனைகளைச் சற்று தியாகம் செய்து இவ் ஓசோன் படையின் பாதுகாப்பில் அக்கறை காட்டுமானால் ஓசோன் படையினைப் பாதுகாப்புடன் பேணமுடியும். வளரும் பல நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு சுற்றுப்புறச் சூழல் குறித்த விழிப்புணர்வு இன்னும் வரவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். “தூய்மையான இருப்பிடம் என்பது ஆரோக்கியமான வாழ்வின் அடிப்படை” மனிதன் இயற்கையை விட்டும், தூய்மையை விட்டும் தூரமாய் செல்லும் போது பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது. ஆகவே, ஒவ்வொரு தனிமனிதனும் இதனை உணர்ந்து செயற்படுவானேயானால், இயற்கை எம் மீது தொடுக்கும் போரில் இருந்து விடுபட முடியும் என்பது திண்ணம்.
                                                                                                Thanks to http://pothikai.wordpress.com

Wednesday, September 11, 2013

பெர்முடா முக்கோணத்தின் மர்மம்…!

                           
                
                   உலகில் மனித அறிவுக்கு எட்டாத மர்மமான இடங்கள் எத்தனையோ இருக்கின்றன. அந்தப் பட்டியலில் முக்கியமான இடத்தைப் பிடிப்பது பெர்முடா முக்கோணம். கப்பல்களையும் விமானங்களையும் விழுங்கும் இந்த முக்கோணைத்தின் பின் இருக்கும் மர்மம் தான் என்ன?!
மர்ம முக்கோணம் ! மரண முக்கோணம் ! பேய் முக்கோணம் என்று அச்சமூட்டம் பெயர்களில் அழைக்கப்படுவது பெர்முடா முக்கோணம். வட அட்லாண்டிக் கடலில் பெர்முடா, மியாமி, பியூர்டொரிகா ஆகிய மூன்று துறைமுகங்களை இணைக்கும் முக்கோண வடிவிலான பகுதிதான் பெர்முடா முக்கோணம். இந்தக் பகுதியில் செல்லும் கப்பல்கள் மற்றும் இந்தப் பகுதிக்கு மேலே பறக்கும் விமானங்கள் மர்மான முறையில் காணாமல் போய்விடுகின்றன. இங்கு இதுவரை 40 கப்பல்களும், 20 விமானங்களும் ஏராளமான சிறு கலன்களும் காணாமல் போயிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கள் ஏன் ? எப்படி? ஏற்படுகின்றன என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் ஆராய்ச்சியாளர்கள் திகைக்கின்றனர். விபத்துக்கள் ஏற்படுவதற்கு கடலில் ஏற்படும் பயங்கர சூறாவளி, சுனாமி போன்று ஏற்படும் ராட்சத அலைகள் ஆகியவை காரணமாக இருக்கலாம் என்ற ஒரு கருத்து நிலவுகிறது.
               ஆனால் காணாமல் போகும் பகுதியில், கப்பல்கள் மற்றும் விமானங்களின் சிறு பகுதிகூட கிடைப்பதில்லை. இவை தான் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் சவாலாக விளங்கும் கேள்வி. பூமி கோளத்தில் பெர்முடா பகுதியின் எதிர் பகுதி ஜப்பானின் கிழக்கு கடல் பகுதி. பிசாசுக் கடல் என்று அழைக்கப்படும் இப்பகுதியில் செல்லும் கப்பல்களும் மர்மமான முறையில் காணாமல் போவதாகக் கூறப்படுவதுண்டு. இந்த இரண்டு முனைகளுக்கும் இடையே உள்ள அதீத காந்த ஈர்ப்பு விசையே விபத்துகள் ஏற்படுவதற்கு காரணம் என்று கூறுகின்றனர் சில ஆய்வாளர்கள். 1908-ம் ஆண்டுதான் பெர்முடா முக்கோணத்தில் முதல் விபத்து பதிவு செய்யப்பட்டது. அன்று முதல் இப்பகுதியில் விமானங்கள் மற்றும் கப்பல்கள் காணாமல் போவது வாடிக்கையாகிவிட்டது.
1918 - ம் ஆண்டு அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான யு.எஸ்.எஸ்., சைக்கிளாப்ஸ் (U.S.S CYCLOPS) என்ற கப்பல் இப்பகுதியில் சென்ற போது காணாமல் போனது. கப்பலில் பயணம் செய்த 306 பேரின் கதி என்னவானது என்று இதுவரை தெரியவில்லை.
1945 - ம் ஆண்டு பெர்முடாஸ் பகுதியில் பறந்த அமெரிக்க கடற்படையின் சிறிய விமானம் காணமல் போனது. இது குறித்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. பெர்முடா முக்கோணத்தின் மர்மத்தை வெளிகொண்டு வரும் நோக்கில் அமெரிக்க ரஷ்ய விஞ்ஞானிகளை கொண்ட குழு ஒன்று அப்பகுதிக்குச் சென்றது. 14 பேர் கொண்ட இக்குழுவினர் எவரும் இதுவரை திரும்ப வரவேயில்லை.
இவ்வாறு விமானங்களையும் கப்பல்களையும் உள்வாங்கி கபளிகரம் செய்யும் பெர்முடா முக்கோணம் மனித அறிவுக்கு எட்டாத மர்மமாகவே இன்றும் விளங்கி வருகிறது.




Friday, September 6, 2013

தமிழ் வரலாறு கி.பி. 1 - கி.பி. 1676

கி.பி. 10

உலக மக்கட்தொகை 170 மில்லியன். இக்காலத்து இந்தியா (எனக்கூறப்படும்) மக்கட்தொகை 35 மில்லியன்.

கி.பி. 21 - 42

குராப்பள்ளி துஞ்சிய பெருந் திருமாவளவன் ஆட்சி. சேரன் கூட்டுவன் கோதை, காரிகிழார், வெள்ளியம்பலத்துத், துஞ்சிய பெருவழுதி ஆகியோரின் காலம்.

கி.பி. 42 - 100

சோழன் செங்கணான், சோழன் நல்லுருத்திரன் ஆகியோரின் ஆட்சி. பாண்டியன் நன்மாறன் கலித்தொகையைத் தொகுத்தான், சேரமான் கணக்காலிரும்பொறை, இளங்கண்டிரக்கோ, இளவிச்சிக்கோ, கோக்கோதைமார்பன், குமணன், பெருஞ்சித்திரனார், பொய்கையார், மருத்துவன், தாமோதரன், நக்கீரனார், கீரன் சாத்தனார், பாண்டியன் இலவந்திகைப்பள்ளி துஞ்சிய நன்மாறன் ஆகியோரின் அற்புதகாலம்.


கண் இமையின் கட்டமைப்பு திட்ட வரைவு- ஐரோப்பிய வகையும் (இடம்) மங்கோலிய வகையும் (வலம்) குறுக்கு வெட்டும் நேர் தோற்றமும். பெல்ஸின் ( bellz ) படி மார்ட்டின் ( martin,1928 ) செய்த உருமாற்றம்.
கி.பி. 53

ஏசுநாதரின் தூதவரில் ஒருவரான செயின்ட் தாமஸ் இக்கால சென்னையில் மறைவு.

கி.பி. 101 - 120

பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் ஆட்சி.

கி.பி. 105

சைனாவில் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது.

கி.பி. 107

ரோமப்பேரரசு அளவிற் மிகபெரியதான காலம்.

கி.பி.120-144

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆட்சி. மூவேந்தர்கள் எதிர்த்தனர், ஆதிக்கும்ப கல்வெட்டு மூலம்.

கி.பி.145-175

வெற்றிவேற்செழியன் ஆட்சி. சிலப்பதிகாரக் கதை நடைப்பெற்ற காலம் கண்ணகிக்குக் கோயில் எடுத்தான் சேரன் செங்குட்டுவன். இலங்கை மன்னன் கயவாகு, சோழன் மாவண்கிள்ளி வாழ்ந்த காலம்.

கி.பி.175-200

கடைக்கழக இலக்கியங்கள் தொகுத்து வழங்கப்பட்டன. நற்றிணை (மாறன் வழுதி)- ஐங்குறுநூறு ( சேரன் யானைகட்சேய்) குறுந்தொகை (பூரிக்கோ- பாண்டியன்-உக்கிரப்பெருவழுதி)
மனிதனுடைய மயிரின் நிறமும் விழித்திரையினதும் தோலினதும் நிறம், கன்களின் வடிவம் ஆகியவற்றின் முக்கிய வகைகள்: பல்வேறு நிறங்கள் கொன்ட மயிர்கள், விரைப்பானவை(மேலே இடம்), சுருட்டையானவை (மேலே வலம்), அலை படிந்தவை; கண் வெளிறியது, கலப்பு நிறம் உள்ளது, கருமயானது (கரு விழியில் மங்கோலிய வகையினரிடமும் புக்ஷ்மன்களிடமும் காணப்படும் இமையோர மடிப்பு காட்டப்பட்டிருக்கிறது); வெளிறியதும், இடைப்பட்டதும், ஆழ் நிறம் உள்ளதுமான தோல்.


கி.பி.180

இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதினார்.

கி.பி.200

இக்கால கம்போடியாவிலும், மலேசியாவிலும் தமிழ் அரசு.

கி.பி.250-275

வரகுண பாண்டியன் ஆட்சி

கி.பி.275-300

மாணிக்கவாசகர் காலம்.

கி.பி.300-700

தமிழகத்தின் தென்பகுதி களப்பிரகர்களின் ஆட்சி.

கி.பி.300-700

தமிழகத்தின் வடபகுதி பல்லவர்களின் ஆட்சி, பல்லவமன்னர்கள் விசுணுகோபன், முதலாம் சிம்மவர்மன், இரண்டாம் சிம்மவர்மன், சிம்மவிசுணு ஆகியோரின் ஆட்சி.

கி.பி.358

துருக்கியைச் சேர்ந்த அன்ஸ் எனும் பெரும் போர் வீரன் ஐரோப்பா நாடுகளைப் படை எடுத்து வெற்றி கண்டான்

கி.பி.400

மனுதர்மம் அமைக்கப்பட்டது.

கி.பி.419
பெருநாட்டில் 150 அடி ஆதவன் கோவில் அமைத்தனர்.

கி.பி.450-535

தெற்கில் போதிதர்மர் காலம்.

கி.பி.570-632

முகமது நபிநாயகம் இஸ்லாமிய மதம் ஏற்படுத்தல். உருவ வழிபாடு இன்மை. ஒரே கடவுள் அல்லா என்ற தத்துவம்

கி.பி.590-631

சைவ நாயனார் திருநாவுக்கரசர் காலம். 312 திருமறைப்பாடல்களை இயற்றினார். இவரை அப்பர் என்றும் அழைப்பர்.

கி.பி.600-900

வைணவ ஆழ்வார் காலம். 4000 பாடல் கொண்ட நாலாயிர திவ்விய பிரபந்தம் தொகுக்கப்பட்டது.

கி.பி.610

நபி நாயகம் இஸ்லாமிய கருத்துக்களை கூறல். நபி நாயகம் 622ல் மெக்கா தப்பிச் செல்லல்.

கி.பி.630-644

சைன திரு உலாப்பயணி யுவான் சுவாங் பயணம்.
தலைத் தோலின் ஊடாக வெட்டுக்கள்.இடம்- சுருட்டை மயிருடன்.வலம்- நேர் மயிருடன்
படங்களின் ஓரங்களில் அதே மயிர்களின் குறுக்கு வெட்டுக்கள்.

கி.பி.641-645

அராபிய முகமதியர் எகிப்த், மெசபடோமியா, பெர்சியா நாடுகளைக் கைப்பற்றினர்.

கி.பி.650

திருஞான சம்பந்தர் காலம். 384 பாடல்களை கொண்ட திருமறையை இயற்றினார்

கி.பி.788

ஆதிசங்கரர் தோற்றம் (788-820) விவேக சூடாமணி இயற்றினார்.

கி.பி.800

இரண்டாம் ஒளவையார் ஒளவை குறள் இயற்றினார். நம்மாழ்வார் பெரும் வைணவ முனி. காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களில் ஒருவர். ஆண்டாள் கிருட்டிணன் பற்றிய பாடல்களை பாடியவர். பக்திமார்க்கம், புத்த மதம் தமிழ்நாட்டில் பரவுவதை தடுத்தது. கெளதம புத்தரை ஒன்பதாவது அவதாரமாக்கினர்.

கி.பி.825

சுந்தரர் நாயன்மார்களில் ஒருவர். இப்போதைய தென் ஆற்காட்டில் தோன்றினார். 38,000 சிவப்பாடல்களை எழுதியுள்ளார். தற்போது 100 பாடல்கள் கிடைத்துள்ளன. இவை திருமறை ஏழாவது புத்தகத்தில் சேர்ந்துள்ளன.

கி.பி.850

மாணிக்கவாசகர் தோற்றம். திருவாசகம் திருபள்ளி எழுச்சி, திருவெம்பாவை இவரது நூல்கள். வைணவர்களின் சமயக்கட்சி தமிழ்நாட்டில் ஆரம்பம்.

கி.பி.900

குண்டலினி யோகப் பயிற்சி மட்ஸ்சிந்தர நாதர் காலம்.

பத்கூம் மண்டையோட்டு முகடு (இடப்புற, நேர், மேலிருந்து தோற்றம்).
கி.பி.900

இந்தோனேசிய பேரரசு புத்தமதம் விடுத்து சைவத்தை ஆதரித்தது. 150 சைவக்கோவில்கள் கட்டப்பட்டன.

கி.பி.1000

உலக மக்கட் தொகை 256 மில்லியன். (இக்காலத்து கூறப்படும்) இந்தியா மக்கட்தொகை 79 மில்லியன்

கி.பி.1000

சிகாண்டிநேவியாவைச் சேர்ந்த கடற் பயணிகள் வட அமெரிக்காவிலுள்ள நோவகோசியா அடைந்தனர்.

கி.பி.1000

பாலிநேசிய இனத்தவர் நியுசிலாந்துவை அடைந்தனர் உலகில் அதிக அளவில் பரவியுள்ளவர்கள்.

கி.பி.1000

துருக்கிய முகமதியர்கள் ஆப்கானித்தானம் பெசாவர் வழியாக இக்கால இந்தியாவில் முதல் முறையாக நுழைந்தவர்கள். முதலாவது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்.

கி.பி.1010

சைவ நூற்தொகுப்பு திருமறை நம்பியாண்டார் நம்பி அவர்களால் தொகுக்கப்பட்டது.

கி.பி.1017-1137

தமிழ்ச் சித்தாந்தி இராமனுசர் காலம். பக்தி மார்க்கம் கடைப்பிடிக்கப்பட்டது.

கி.பி.1024
முகமது கஜினி சோமநாதபுரம் கோவிலை அழித்தான்.

கி.பி.1040

சைனர்கள் திசை அறி கருவி கண்டுபிடித்தனர்.

கி.பி.1150
வீர சைவர் தலைமை மேற்கொண்டு பசுவண்ணா, மனிதநேயம், மனிதர்களிடையே சம நிலை, சிவலிங்க வழிபாடு இவற்றை போதித்தார்.

கி.பி.1197

நாலந்தாவில் புத்தசமய பல்கலைக்கழகம் முகமதியரால் அழிக்கப்பட்டது.

கி.பி.1230-60

ஒரிசாவில் கொனர்க்கில் சூரியன் கோவில் கட்டப்பட்டது.

கி.பி.1232

போசள வீர நரசிம்மன் காவிரிக்கரையில் மகேந்திரமங்கலத்தில் பாண்டியர்களையும், காடவ கோப்பெருஞ்சிங்கனையும் தோற்கடித்து, மூன்றாம் இராசராசனை விடுவித்து சோழ நாட்டை மீட்டு சோழரிடம் ஒப்படைத்தான். போசளர்கள் திருச்சிக்கு அருகாமையில் கண்ணூர் கொப்பத்தில் துணை தலைநகரை உருவாக்கினார்.

கி.பி.1250

சைவ சித்தாந்தி மெய்கண்டார் காலம்.

கி.பி.1268-1369

தமிழ் அறிஞர் வேதாந்த தேசிகர் காலம். வடகலை வைணவத்தை காஞ்சியில் அறிமுகப்டுத்தினார்.

கி.பி.1272

மார்க்கோ போலோ தற்போதைய இந்தியா வந்தார்.

கி.பி.1296

அலாவூதின் கில்ஜி பெரும்பாலான தற்போதைய இந்தியாவை தன் ஆட்சியில் கொண்டுவந்தார். அவருடைய தளபதி மாலிக்கப்பூர் இராமேசுவரம் வரை படை எடுத்து வென்றார்.

கி.பி.1300

கன்யாகுமரியில் முகமதிய மசூதி அமைக்கப்பட்டது.

கி.பி.1311

தமிழ்நாட்டில் முகமதியர் ஆட்சி வேரூன்றியது.

கி.பி.1333-1378

மதுரை ஒரு சுதந்திர சுல்தானியப் பகுதியாக முகமதியர் ஆட்சியில் இருந்தது, முகமதியர்களின் வெற்றியைக் கண்டு கொதித்த இந்துக்கள் தக்காணத் தின் கிழக்கில் புரலாய நாயக்கனும், கபாய நாயக்கனும் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

கி.பி.1340

போசள மன்னன் மூன்றாம் வல்லாலன் காலத்தில் மதுரை சுல்தான் சலாவுதீன் அசன்சாவை கொன்றான்.

சம்புவராயர்கள்

சோழர் காலம் தொட்டு 16ஆம் நூற்றாண்டு வரை ஒமாயநாட்டு (திண்டிவனம்) மூன்னூற்றுப்பள்ளியை ஆண்டு வந்தார்கள். பிற்காலத்தில் ஆற்காட்டு மாவட்டங்களையும் செங்கட்பட்டு மாவட்டத்தையும் உள்ளடக்கி இராஜகம்பீர இராச்ஜியம் என்ற பெயரில் ஆன்டனர். விருச்சிபுரத்தை இருக்கையாகக் கொண்டிருந்தனர். பிற்காலச் சோழர்களுக்கு உட்பட்டிருந்தனர். சோழர்கள் படையில் சிறந்த பணி ஆற்றி உள்ளனர். அழகிய சிங்கன், இராஜராஜசம்புவராயன், திருபுவனவீரசம்புவராயன் அழகிய சோழசாம்புவராயன் அத்திமல்லன், வீரப்பெருமாள், எடிதிலி சம்புவராயன், இராஜகம்பீர சம்புவராயன் ஆகியோர் சம்புவராயர்களின் ஆரம்ப கால அரசர்கள்.

கி.பி.14

இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஏற்பட்ட முகமதியர் படையெடுப்பு பாண்டியனை ஒழித்தது முகமதியர் படையெடுப்பு பின்போது மூன்றாம் வீரவல்லாலன் சம்புவராயர்களைத் தமிழகத்தின் வடக்குப் பகுதியில் காவலர்களாக நிறுத்தினார். சம்புவராயர்கள் தமிழையும் தமிழ்க் குடியினரையும் பெரிதும் பேணியுள்ளார்கள் இரட்டைப்புலவர்கள் இவர்களுடைய ஆதர்வு பெற்றவர்கள். இவர்களின் நாணயங்கள் " வீரசெம்பன் குளிகைகள்" என அழைக்கப்பட்டன. தமிழர்களுக்கு புகலிடங்கள் அமைத்துக் கொடுத்தனர். "அஞ்சினான் புகலிடங்கள் அமைத்தார்கள்".

கி.பி.1336

விஜய நகர அரசு(1336-1646) தொடர்ந்தது.

கி.பி.1336

அரிகரன் விஜயநகரஅரசை நிறுவினான். அரிகரனின் தம்பியும் துணையரசனுமாகிய புக்கன் முகமதியர்களுக்கு எதிராக போர் செய்தான். கம்பணன் தமிழகம் உள்ளிட்ட தென்மண்டலத்தில் விஜயநகரத்தின் மகாமண்டலேசுவரனாக விளங்கினான். விஜயநகர ஆட்சிகாலத்தில் - தெலுங்கு பிராமணர்கள் தமிழகம் வந்தனர். துளுநாட்டைச் சேர்ந்த வேளாண். தொழில் செய்த ரெட்டியார்களும் வந்தனர். செளராட்டிரர்களும் குஜராத்திலிருந்து வந்தனர். வருணாசிரமம் வழியுறுத்தப்பட்டது. போர்த்துகீசியர்கள் வழி வந்த கிறித்துவத் துறவிகள் தமிழகத்துக் கடலோர பகுதிகளில் சமயப்பணி ஆற்றினார். சிற்றம்பர் நாடிகள் என்ற புலவரும், இரட்டைப்புலவர்களும், காலமேகப்புலவரும் இக்காலத்தில் வாழ்ந்தனர். 15 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்
16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் கிருட்டிண தேவராயர் புலவர்களின் புரவலராக இருந்தார்.

கி.பி.1336

விஜய நகர அரசு (1336-1646) தொடர்ந்தது.

கி.பி.1337
உலகம் முழுமையும் பிளேக் நோய் பரவி 75 மில்லியன் மக்கள் உயிர் கொள்ளை கொண்டது.

கி.பி.1350

தென்னிந்திய சித்தாந்தி அபிய திக்தத்திரர் காலம். சைவ, வைணவ வேற்றுமை அகற்ற பெரு முயற்சி எடுத்தவர்.

கி.பி.1440

ஜெர்மனியில் அச்சடிக்கும் இயந்திரம் சோகன்ஸ் கட்டன்பர்க் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

கி.பி.1469-1538

சீக்கிய மதம் கண்ட குரு நானக் காலம்

கி.பி.1492

கிரிசுடோபர் கொலம்பஸ் இந்தியாவை கண்டுபிடிக்க எண்ணி சேன் செல்வி டோர் சென்று வட அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.

கி.பி.1498

போர்த்துக்கல்லைச் சேர்ந்த வாசுகோடா காமா கடல் வழி முதன் முதலாக கல்கத்தா வந்து சேர்ந்தார்.

கி.பி.1500

திருப்புகழ் இயற்றிய தமிழ்ச் சித்தாந்தி அருணகிரிநாதர் காலம்.

கி.பி.1500

புத்த சைவ அரச குமாரர் சாவா விலிருந்து படையெடுத்து வந்த முகமதியர்களால் வெளியேற்றப்பட்டார்.

கி.பி.1500

உலக மக்கள் தொகை 425 மில்லியன். தற்போதைய இந்திய மக்கள் தொகை 105 மில்லியன்.

கி.பி.1509

தமிழகத்தில் கிருட்டிணதேவராயர் ஆட்சி.

கி.பி.1510

போர்த்திகீசிய கத்தோலிக்கப் பாதிரியார் வருகை. ஐரோப்பியர் வருகை ஆரம்பம்.

கி.பி.1546

நாயக்கர்கள் ஆட்சி, விசய நகர ஆட்சிக்குப்பின்னர் இடைப்பட்ட காலத்தில் சூரப்ப நாயக்கரும், கிருட்டிணப்ப நாயக்கரும் ஆண்டனர்.

கி.பி.1565

விஜய நகர ஆட்சி முகமதியர்களால் அழிக்கப்பட்டது. முழுமையான மறைவு 1646ல் அமைந்தது.

கி.பி.1595

ஆயிரம் தூண்கள் கொண்ட சிதம்பரம் கோவில் அரங்க வேலை ஆரம்பிக்கப்பட்டு 1685ல் முற்று பெற்றது. சைவ சித்தாந்த விளக்க நூற்கள் தோன்றின. சூரியனார் மடத்தின் தலைவர் சிவாக்கிர யோகிகள் சிவஞான போதத்துக்கும், சிவஞான சித்தியாருக்கும் உரைநூற்கள் எழுதினார்.

கி.பி.1601

கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்பட்டது. ஆங்கிலக்கிழக்கிந்திய கம்பெனியர் சென்னை, கல்கத்தா, பம்பாய், ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டு 17 நூற்றாண்டு முற்பகுதியில் நாட்டு அரசியலில் ஈடுப்பட்டு ஆதிக்கத்தைப் பரப்பினர். 18 - ஆம் நூற்றாண்டின் நடுபகுதி வரை ஐரோப்பிய கம்பெனியர்கள் இந்தியாவில் அரசியல் ஆதிக்கத்தில் எவ்வித முன்னேற்றமுல் அடையவில்லை.

கி.பி.1619

யாழ்ப்பாணத் தமிழ் அரசு போர்த்துகீசியர்களால் கைப்பற்றப்பட்டது. 1658 வரையும் ஆதிக்கம் செலுத்தினர், பல ஆலயங்கள் அழிக்கப்பட்டன

கி.பி.1619

அமெரிக்காவில் முதன் முதலாக ஆப்பிரிக்கர்கள் அடிமையாக விற்கப்பட்டனர்.

கி.பி.1623-1659

திருமலை நாயக்கர் ஆட்சி. அரப்பணிகளும் கலைப்பணிகளும் அவருடைய புகழை வளர்த்தன. அழகிய தெப்பக்குளம், புதுமண்டபம், ஆவணிமூலை, இராயர் கோபுரம் - நாயக்கர்களால் கட்டப்பட்டன. 17 - ஆம் நூற்றாண்டில் எல்லப்பநாவலர் அருணாசலபுராணம், அருணைக் கலம்பகம், எழுதி சிவ எல்லப்ப நாவலர் என புகழ்பெற்றார். திருமலை நாயக்கனின் விருப்பப்படி மீனாட்சி அம்மைப் பிள்ளைத் தமிழைப் படைத்தார். காசியில் காசி மடம் எழுப்பினர். நாயக்கர் காலத்தில் முத்துத் தாண்டவர் - தமிழில் பல அற்புதமான கீர்த்தனைகள் இயற்றினார். பல அமிர்தக்கவிராயர், சர்க்கரைப்புலவர் என்போரும் குறிப்பிடத்தக்கவர்கள். இரத்தின கவிராயர் - மச்ச புராணம் எழுதினார்.

நாயக்கர் கால இலக்கியங்கள் பொற்கொல்லர் வீரகவிராயர் - இசை கலந்த நடையில் அரிச்சந்திரபுராணத்தை படைத்தார்.

அதிவீர ராமபாண்டியன், நளனின் துன்பியில் வரலாற்றை நைடதம் நூலாக்கினான் இலிங்க புராணம், மகா புராணம், கூர்ம புராணம் கரிவலம் வந்த நல்லூர் சிவனைப்போற்றி பதிற்றுப்பத்து, அந்தாதி இலக்கயம் போன்றவையும் எழுதினார். அதிவீரராம பாண்டியனின் தம்பி வராத்துங்க ராம பாண்டியன் எழுதிய உடலுறவு இன்ப விளக்கநூல் - கோக்கோகம். இவர்கள் பாண்டிய அரசக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

கி.பி.1627-1680

மராட்டிய மன்னன் சிவாஜியின் காலம். முகமதியர் ஆட்சிகளை வெற்றிக்கொண்டு மராட்டிய ஆட்சியை விருவுப்படுத்தினார்.

கி.பி.1628 - 1688

திருவைகுந்தத்தில் பிறந்த சைவ சித்தாந்தி குமர குருபரசாமிகள் கலிவெண்பா, கயிலைக் கலம்பம் படைத்தார்.

கி.பி.1650

சைவ மடமான தரும புரம் ஆதீனம் குரு ஞானசம்பந்தரால் மாயவரம் அருகில் அமைக்கப்பட்டது.

கி.பி.1676 - 1856

சிவாஜி தஞ்சையிலிருந்து சுல்தானிய ஆதிக்கத்தை ஒழித்ததுடன், 1677ல் தஞ்சையை மராட்டியர்களின் கீழ் கொண்டு வந்தார், விஜய நகரத்தின் வீழ்ச்சிக்கு பிண் மராட்டிய அரசு தோன்றியது. முகமதியர் அரசுகளை நசுக்கி முன்னேறியது. தஞ்சையை மராட்டியர்கள் ஆண்டனர். தமிழ்புலவர்களுக்கு அரசின் ஆதர்வு இல்லை. திருவாரூர் வைத்தியநாத்தேசிகர், வேதாரண்யம் தாயுமானவர், சுவாமிநாததேசிகர், சீர்காழி அருணாசலக் கவிராயர் (தமிழில் பல கீர்த்தனைகள் அமைத்த இசையறிஞர்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இரன்டாம் சரபோசி மன்னர் சரஸ்வதி மகாலைக் கட்டினார்.

                                                                தகவல் தந்த  Google -க்கு நன்றி !

தமிழர் வரலாறு கி.மு

கி.மு 14 பில்லியன்

பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்

பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்

நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000

இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

கி.மு. 360000

முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கி.மு. 300000

யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000


நியாண்டெர்தல் மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.

கி.மு. 75000

கடைசி பனிக்காலம.். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000

தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 - 35000

தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

கி.மு. 35000 - 20000

ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

கி-மு. 20000 - 10000

ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )

கி-மு. 10527

முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.

கி.மு. 10527 - 6100

பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன்,  நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.

கி.மு. 10000

கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.

கி.மு. 6087
கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.

கி.மு 6000 - 3000

கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.

கி.மு. 5000
உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.

கி.மு. 4000

சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.

கி.மு - 4000

கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.

கி.மு - 3200

சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.

கி.மு - 3113

அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.

கி.மு - 3102

சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.

மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்
இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.


கி.மு - 3100 - 3000

ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.

கி.மு - 2600

எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

கி.மு - 2387

இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.

கி.மு - 2000 - 1000

காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.

கி.மு - 1915

திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

கி.மு. - 1900

வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

கி.மு. 1500

முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

கி.மு. - 1450

உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.

கி.மு. - 1316

மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.


கி. மு. 1250

மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.

கி. மு . 1200

ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.

கி. மு. 1000

உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

கி. மு. 1000-600

வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.

கி. மு. 950

அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.

கி. மு. 950

வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.

கி. மு. 925

யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

கி. மு. 900

இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.

கி. மு. 850பின்

இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.

கி. மு. 776

கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.

   
குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி.   பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது)   சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)


கி. மு. 750

பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

கி. மு. 700

சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கி. மு. 623- 543

கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

கி. மு. 600

லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.

கி. மு. 600

கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

கி. மு. 599 - 527

மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.

கி. மு. 560

பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கி. மு. 551-478

கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.

கி. மு. 500

கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.

கி. மு. 478

இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

கி. மு. 450

ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.

கி. மு. 428 - 348

சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.

கி. மு. 400

கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

கி. மு. 350 - 328

உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)

கி. மு. 328 - 270

மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)

கி. மு. 326

அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.

கி. மு. 305

சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.

கி. மு. 302

சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

கி. மு. 300

சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கி. மு. 300

கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273-232

மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270-245

சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.

கி.மு. 251

புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்

கி.மு. 245-220

சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

கி.மு. 221

புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 - 200

கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220-180

குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.

கி.மு. 200

முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

கி.மு. 200

தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125-87

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87-62

செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி

கி.மு. 62-42

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42-25

பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என ஒளவை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31

உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25-9

இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1

கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.

கி.மு. 4

ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார்.

                                                                 தகவல் தந்த Google- க்கு   நன்றி !

Wednesday, February 27, 2013

மத்திய ரயில்வே பட்ஜெட் 2013

                  
                               
                2013-14ம் ஆண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளமுக்கிய அம்சங்கள்:

ரயில்வே துறை புதிதாக செயல்படுத்த உள்ள 12 திட்டங்களுக்கு ரூ.1.05 லட்சம் கோடி செலவு செய்யப்படும். 

ரே பரேலி, பில்வாரா, சோனிபட், கலாஹன்டி, கோலார், பாலக்காடு, பிரதாப்கர் உள்ளிட்ட பகுதிகளில் ரயில் பெட்டிகள் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு தொழிற்சாலைகள். 

இந்த நிதியாண்டில், நிதி அமைச்சகத்திடம் இருந்து ரூ.3000 கோடி வட்டியுடன் கூடிய கடனாக ரயில்வே அமைச்சகம் பெற்றுள்ளது.

100 கோடி டன் சரக்குகளைக் கையாளும் திறனை பெற்றுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெறும். 

இந்தியாவில் உள்ள மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் 5 உதவித் தொகை திட்டங்கள் அறிவிக்கப்படும்.

செகந்தராபாத்தில் மத்திய ரயில்வே பயிற்சி மையம் அமைக்கப்படும். 

ரயிலில் உள்ள சமையலறை கூடங்களுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் கட்டாயமாக்கப்படும். 

துறைமுகப் பகுதிகளை ஒருங்கிணைக்க ரூ.3800 கோடி 1800111321 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ரயில்வே பற்றிய விவரங்களை கேட்டறிந்து கொள்ளலாம்.

 பயணிகள் மூலம் ரூ. 42,210 கோடி வருவாய் கிடைக்கும்

சரக்குப் போக்குவரத்து மூலம் ரூ. 93 ஆயிரம் கோடி கிடைக்கும்

ரயில்வே சரக்குக் கட்டணம் 5 சதவீதம் உயர்வு 

26 புதிய பாசஞ்சர் ரயில்கள் அறிமுகம் 

67 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் 

 பயணிகள் கட்டணத்தில் உயர்வில்லை 

விளையாட்டு வீரர்கள், மரணத்திற்குப் பிந்தைய வீர விருது பெற்ற படை வீரர்களின் பெற்றோர்களுக்கு ரயில் பயணக் கட்டணத்தில் சலுகை

சுதந்திரப் போராட்ட தியாகிகள் 3 வருடங்களுக்கு ஒருமுறை பாஸ்களை புதுப்பிக்க வேண்டும்

குறிப்பிட்ட ரயில்களில் 'வை ஃபி' வசதி அறிமுகம்

குறிப்பிட்ட ரயில்களில் நவீன வசதிகளுடன் கூடிய அனுபூதி கோச்சுகள் அறிமுகம் 

அருணாச்சல் பிரதேசத்திற்கு முதல் முறையாக ரயில் சேவை அறிமுகம்

 திருச்சி உள்ளிட்ட 25 இடங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள்

அமைப்பு மாணவர்களுக்காக ஆசாதி எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம்

ரயில்வே  ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்ட ரூ.300 கோடி ஒதுக்கீடு 
 
ரயில்வேயில் 1.52 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும் 

டெல்லி நிஜாமுதீன், ஹசரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.100 கோடி

நடப்பாண்டில் ரயில்வே ரூ 100 கோடி சரக்குகளை கையாண்டு சாதனை 

தனியார் உதவியுடன் ரயில்வே துறையில் ரூ. 1 லட்சம் கோடி முதலீடு 

ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நவீனப்படுத்தப்படும் ஆன்லைன் மூலம் நிமிடத்திற்கு 7200 டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் நவீனப்படுத்தப்படும் ஆன்லைன் முன்பதிவு நேரம் முற்பகல் 12 மணி முதல் இரவு 11.30 வரை செயல்படுத்தப்படும்

179 ரயில்வே நிலையங்களில் எஸ்கலேட்டர் அமைக்கப்படும்

 400 ரயில் நிலையங்களில் லிப்ட் அமைக்கப்படும்

 ரயில்வே உணவு தயாரிப்புக் கூடங்கள் நவீனப்படுத்தப்படும்.
 உணவின் தரத்தை பரிசோதிக்கவும் தனி ஏற்பாடு ரயில்வே உணவு தயாரிப்புக் கூடங்கள் நவீனப்படுத்தப்படும் உணவின் தரத்தை பரிசோதிக்கவும் தனி ஏற்பாடு 

பெண்கள் பாதுகாப்புக்கு கூடுதலாக 4 பெண்கள் பாதுகாப்புப் படை அமைக்கப்படும் 

நாடு முழுவதும் 10197 ஆளில்லா ரயில்வே கேட்கள் மூடப்படும்

17 முக்கிய ரயில்வே பாலங்கள் சீரமைக்கப்படும்

 ரயில் நிலையங்கள், ரயிலில் தூய்மையை கடைப்பிடிக்க தீவிர நடவடிக்கை 

 ரயில்வே போலீஸ் படையில் பெண்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும்

1040 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்

பெண்கள் பாதுகாப்புக்கு 24 மணி நேர தொலைபேசி வசதி 

பயணம் செய்யும்போதே ரயில்வே அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளும் வசதி

விரிவுபடுத்தப்படும் ரயிலில் தீவிபத்துக்களைத் தவிர்க்க நவீன தொழில்நுட்பம் அறிமுகம்

 ரயில் குடிநீர் நிலையம் விஜயவாடா, நாக்பூர் அகமதாபாத், பிலாஸ்பூரில் அமைக்கப்படும்

Saturday, February 23, 2013

சில்லறை வர்த்தகமும் இந்திய விடுதலையும்

                    இந்தியாவில் தடம் பதித்து இடம் பிடிக்க வேண்டும் என்ற திட்டத்தை வரையறை செய்த ஆண்டு எந்த ஆண்டோ தெரியவில்லை; ஆனால் 2010-இல் திட்டத்தைத் தொடங்கி, 2012-இல் கடையைத் திறந்து விற்பனையைத் தொடங்கி விட்டது வால்மார்ட் நிறுவனம். கொள்கை அறிவிக்கை, எதிர்ப்பு, ஆதரிப்பு, விவாதம், வாக்கெடுப்புக் கோரிக்கை, வாக்கெடுப்புக்கு மறுப்பு என இந்திய அரசியலிலும், மக்கள் மத்தியிலு மாகப் பல தளங்களைத் தொட்டு, கடை விரித்துள்ள வால்மார்ட் இந்தியாவில் 14 மொத்த விற்பனை நிறுவனங்களை நடத்திக்கொண்டிருக்கிறது.  மேலும் விரிவாக்கம் செய்ய முனைகிறது.
இந்திய அடித்தட்டு மக்களின், நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை மிக நயமாகச் சுரண்டும் நோக்குடன் சில்லறை வர்த்தகத்தில் நுழைய முனைந் துள்ளது, வால்மார்ட் நிறுவனம். தமிழகத்தில், சென்னையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இயக்கங்கள் வால்மார்ட் நிறு வனத்தை எதிர்த்துப் போராட்டத்தைத் தொடங்கி யுள்ளன.
காங்கிரஸ் கட்சி - ‘சில்லறை வணிகத்திற்குள் அந்நிய முதலீட்டுக்கு இடமில்லை’ என்று கொள்கை பேசிய காங்கிரஸ் கட்சி - சில்லறை வணிகத்திற்குள் வால்மார்ட் போன்ற நிறுவனங்களை வரவேற்பதற்கு என்ன காரணம்?
காங்கிரஸ் கட்சிக்கேயுரித்தான முதலாளித்துவ மனப்பான்மைதான்!
இந்தியாவில் தடம் பதித்து இடம் பிடிக்க வேண்டும் என்ற திட்டத்தை வரையறை செய்த ஆண்டு எந்த ஆண்டோ தெரியவில்லை; ஆனால் 2010-இல் திட்டத்தைத் தொடங்கி, 2012-இல் கடையைத் திறந்து விற்பனையைத் தொடங்கி விட்டது வால்மார்ட் நிறுவனம்.கொள்கை அறிவிக்கை, எதிர்ப்பு, ஆதரிப்பு, விவாதம், வாக்கெடுப்புக் கோரிக்கை, வாக்கெடுப்புக்கு மறுப்பு என இந்திய அரசியலிலும், மக்கள் மத்தியிலு மாகப் பல தளங்களைத் தொட்டு, கடை விரித்துள்ள வால்மார்ட் இந்தியாவில் 14 மொத்த விற்பனை நிறுவனங்களை நடத்திக்கொண்டிருக்கிறது.மேலும் விரிவாக்கம் செய்ய முனைகிறது.இந்திய அடித்தட்டு மக்களின், நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை மிக நயமாகச் சுரண்டும் நோக்குடன் சில்லறை வர்த்தகத்தில் நுழைய முனைந் துள்ளது, வால்மார்ட் நிறுவனம்.தமிழகத்தில், சென்னையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இயக்கங்கள் வால்மார்ட் நிறு வனத்தை எதிர்த்துப் போராட்டத்தைத் தொடங்கி யுள்ளன.காங்கிரஸ் கட்சி - ‘சில்லறை வணிகத்திற்குள் அந்நிய முதலீட்டுக்கு இடமில்லை’ என்று கொள்கை பேசிய காங்கிரஸ் கட்சி - சில்லறை வணிகத்திற்குள் வால்மார்ட் போன்ற நிறுவனங்களை வரவேற்பதற்கு என்ன காரணம்?காங்கிரஸ் கட்சிக்கேயுரித்தான முதலாளித்துவ மனப்பான்மைதான்!
ஒரு நாட்டின் அரசு வேறொரு நாட்டுடன் அரசியல், பொருளாதார உறவு கொள்ளும்போது, இரண்டு அரசுகளுமே தத்தமது மண்ணின் உழைக்கும் வர்க்கங்களுக்கு எதிராக, நாட்டு அளவில் உறவு கொள்கின்றன என்றால், அந்த நாடுகள் தீவிர முதலாளித்துவ மனப்பான்மை கொண்டவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  அத்தகைய - அதே - முதலாளித்துவ மனப்பான்மை தான் காங்கிரஸ் மண்டையில் நிரம்பி வழிகிறது.  அதனால்தான் அதன் பொருளாதார அறிவு, இந்திய மக்களைச் சிறிதும் திரும்பிப் பார்க்க மறுக்கிறது.
வால்மார்ட் (Wallmart) மட்டுமின்றி, டெஸ்கோ (Tesco), கேர் ஃபோர் (Care Four) போன்ற நிறுவனங் களும் இந்தியாவில் கடை திறந்து, கல்லா கட்டி, பின் இந்தியாவை வழித்தெடுக்கத் துடிக்கின்றன.
இந்த நிறுவனங்கள் இந்தியாவைத் தேர்ந் தெடுக்கக் காரணம்?
இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியில் (GDP) சில்லறை வர்த்தகம் 11 விழுக்காடாக உள்ளது.  இதன் மதிப்பு 2015-இல் 833 பில்லியன் அமெரிக்க டாலராகும்.  2018-இல் 1.3 ட்ரில்லியன் (ஒரு ட்ரில்லியன் = 1 லட்சம் கோடி) அமெரிக்க டாலராக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. போதாக்குறைக்கு, பிற எந்த நாட்டையும் விட இந்தியர்களை மிகச் சுலபமாக ஏமாற்ற, இருக்கவே இருக்கிறது ஆன்மிக வாய்க்கால்.  அதிலே முயன்றால், இந்தியச் செல்வத்தைத் தாராளமாக வேட்டையாட லாமே இந்த வணிக நிறுவனங்கள்! இதற்கு அனுகூலமாக பல உபரிக் காரியங் களையும் செய்யும் இந்த வணிக நிறுவனங்கள்.
‘சில்லறை வர்த்தகம் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வரி வருவாய் அதிகரிக்கும்’ என பிரதமர் மன் மோகன் நம்புகிற வேளையில், அந்நிய நிறுவனங் களை நுழைப்பதற்கான காரணம் என்று ‘இந்திய விவசாயிகளை இடைத்தரகர்கள் கொள்ளையிட்டு வருவதாகவும் வால்மார்ட், விவசாயிகளிடம் நேரடி யாகக் கொள்முதல் செய்து விற்கப்போவதால், நியாயமான விலை கிடைக்கும் என்றும்’ ஆளுங் கட்சிக் கும்பல் கதை பரப்பி வருகிறது.இது முற்றிலும் தவறு என்று மறுத்துரைக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பெப்சி, கோக் போன்ற மென்பானங்கள் இந்திய உள்நாட்டுப் பானமான காளிமார்க் போன்றவற்றை எப்படி தந்திரமாக அழித்தன என்று சுட்டிக்காட்டுகிறது.
“பன்னாட்டுச் சில்லறை வர்த்தக நிறுவனங்களின் வருகையால் இந்திய விவசாயிகள் நிலங்களைப் பெரிய நிறுவனங்களிடம் இழக்கும் நிலை ஏற்படும்.  இது விவசாயத் துறையில் மோசமான மாற்றங்களை உருவாக்கும்” என எச்சரித்துள்ளார் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்.“வால்மார்ட் போன்ற நிறுவனங்களின் வருகை யால் சீனாவின் விவசாய விளைபொருட்கள் இந்தி யாவில் குவியும்.  இதனால் இந்திய விவசாயிகள் பாதிக்கப்படுவர்” என்று பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் மாநிலங்களுக்கிடையேயான கீரை, காய், பூ உள்ளிட்ட சில்லறை வர்த்தகங்களிலும் அந்நிய நிறுவனங்கள் நுழைந்து, வணிகர்களைத் தங்களுக்குத் தரகர்களாக மாற்றி, தொழிலை அப்படியே தங்கள் கைக்குள் அமுக்கிவிடும்.
மேலும், சில்லறை வணிகத்தில் அந்நிய முத லீட்டைக் கொண்டு வருவதால் ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழப்பர். இப்படியெல்லாம் நடக்காது என்று காங்கிரஸ் கட்சியால் எந்த வாக்குறுதியும் கொடுக்க முடியாது.  முட்டாள் தனமாகவாவது நம்பினால்தானே வாக் குறுதி கொடுக்க முடியும்!  மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது என்பது காங்கிரசின் மனசாட்சிக்குத் தான் நன்றாகத் தெரியுமே!
வேலைவாய்ப்பு பறிபோதல், சிறுகடைகள் மூடப்படுதல் போன்ற பொருளாதாரச் சுரண்டல் களைத் தவிர ‘‘சில்லறை வணிகத்திற்காகப் பிற நாடுகளில் தடம் பதிக்கும் நிறுவனங்கள் ஆயுதத் தளவாட உற்பத்தி செய்து, பயங்கரவாதிகளுக்கு விற்பனை செய்யும் மரண வியாபாரிகள்’’ என்று இடதுசாரிகள் எச்சரிப்பது, இந்திய மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.
நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் பொறுப்பை ஏற்கனவே உள்நாட்டுப் பெரு முதலாளிகளிடம் ஒப்படைத்து விட்டு, பொம்மை அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும், செப்பு கின்ற பசப்பு வார்த்தைகளுக்கு இந்தியர்கள் மயங்குவது கூடாது.‘சில்லறை வர்த்தகத்தில் அந்நியர் முதலீடு வேண்டாம்’ என்ற இடதுசாரிகளின் முழக்கத்தின் உயிரோட்டத்தைப் புரிந்துகொண்டு, கருத்துநிலை யளவில் விழிப்புணர்வு பெற வேண்டும்.கொள்கையளவில் நமது தமிழக மக்கள் எடுக்கின்ற முடிவே, நமது மண்ணின் விடுதலை மீண்டும் பறிபோகாமல் காப்பாற்றும்.

                          Thanks to  www.keetru.com