Wednesday, February 27, 2013

மத்திய ரயில்வே பட்ஜெட் 2013

                  
                               
                2013-14ம் ஆண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளமுக்கிய அம்சங்கள்:

ரயில்வே துறை புதிதாக செயல்படுத்த உள்ள 12 திட்டங்களுக்கு ரூ.1.05 லட்சம் கோடி செலவு செய்யப்படும். 

ரே பரேலி, பில்வாரா, சோனிபட், கலாஹன்டி, கோலார், பாலக்காடு, பிரதாப்கர் உள்ளிட்ட பகுதிகளில் ரயில் பெட்டிகள் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு தொழிற்சாலைகள். 

இந்த நிதியாண்டில், நிதி அமைச்சகத்திடம் இருந்து ரூ.3000 கோடி வட்டியுடன் கூடிய கடனாக ரயில்வே அமைச்சகம் பெற்றுள்ளது.

100 கோடி டன் சரக்குகளைக் கையாளும் திறனை பெற்றுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெறும். 

இந்தியாவில் உள்ள மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் 5 உதவித் தொகை திட்டங்கள் அறிவிக்கப்படும்.

செகந்தராபாத்தில் மத்திய ரயில்வே பயிற்சி மையம் அமைக்கப்படும். 

ரயிலில் உள்ள சமையலறை கூடங்களுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் கட்டாயமாக்கப்படும். 

துறைமுகப் பகுதிகளை ஒருங்கிணைக்க ரூ.3800 கோடி 1800111321 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ரயில்வே பற்றிய விவரங்களை கேட்டறிந்து கொள்ளலாம்.

 பயணிகள் மூலம் ரூ. 42,210 கோடி வருவாய் கிடைக்கும்

சரக்குப் போக்குவரத்து மூலம் ரூ. 93 ஆயிரம் கோடி கிடைக்கும்

ரயில்வே சரக்குக் கட்டணம் 5 சதவீதம் உயர்வு 

26 புதிய பாசஞ்சர் ரயில்கள் அறிமுகம் 

67 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் 

 பயணிகள் கட்டணத்தில் உயர்வில்லை 

விளையாட்டு வீரர்கள், மரணத்திற்குப் பிந்தைய வீர விருது பெற்ற படை வீரர்களின் பெற்றோர்களுக்கு ரயில் பயணக் கட்டணத்தில் சலுகை

சுதந்திரப் போராட்ட தியாகிகள் 3 வருடங்களுக்கு ஒருமுறை பாஸ்களை புதுப்பிக்க வேண்டும்

குறிப்பிட்ட ரயில்களில் 'வை ஃபி' வசதி அறிமுகம்

குறிப்பிட்ட ரயில்களில் நவீன வசதிகளுடன் கூடிய அனுபூதி கோச்சுகள் அறிமுகம் 

அருணாச்சல் பிரதேசத்திற்கு முதல் முறையாக ரயில் சேவை அறிமுகம்

 திருச்சி உள்ளிட்ட 25 இடங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள்

அமைப்பு மாணவர்களுக்காக ஆசாதி எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம்

ரயில்வே  ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்ட ரூ.300 கோடி ஒதுக்கீடு 
 
ரயில்வேயில் 1.52 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும் 

டெல்லி நிஜாமுதீன், ஹசரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.100 கோடி

நடப்பாண்டில் ரயில்வே ரூ 100 கோடி சரக்குகளை கையாண்டு சாதனை 

தனியார் உதவியுடன் ரயில்வே துறையில் ரூ. 1 லட்சம் கோடி முதலீடு 

ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நவீனப்படுத்தப்படும் ஆன்லைன் மூலம் நிமிடத்திற்கு 7200 டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் நவீனப்படுத்தப்படும் ஆன்லைன் முன்பதிவு நேரம் முற்பகல் 12 மணி முதல் இரவு 11.30 வரை செயல்படுத்தப்படும்

179 ரயில்வே நிலையங்களில் எஸ்கலேட்டர் அமைக்கப்படும்

 400 ரயில் நிலையங்களில் லிப்ட் அமைக்கப்படும்

 ரயில்வே உணவு தயாரிப்புக் கூடங்கள் நவீனப்படுத்தப்படும்.
 உணவின் தரத்தை பரிசோதிக்கவும் தனி ஏற்பாடு ரயில்வே உணவு தயாரிப்புக் கூடங்கள் நவீனப்படுத்தப்படும் உணவின் தரத்தை பரிசோதிக்கவும் தனி ஏற்பாடு 

பெண்கள் பாதுகாப்புக்கு கூடுதலாக 4 பெண்கள் பாதுகாப்புப் படை அமைக்கப்படும் 

நாடு முழுவதும் 10197 ஆளில்லா ரயில்வே கேட்கள் மூடப்படும்

17 முக்கிய ரயில்வே பாலங்கள் சீரமைக்கப்படும்

 ரயில் நிலையங்கள், ரயிலில் தூய்மையை கடைப்பிடிக்க தீவிர நடவடிக்கை 

 ரயில்வே போலீஸ் படையில் பெண்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும்

1040 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்

பெண்கள் பாதுகாப்புக்கு 24 மணி நேர தொலைபேசி வசதி 

பயணம் செய்யும்போதே ரயில்வே அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளும் வசதி

விரிவுபடுத்தப்படும் ரயிலில் தீவிபத்துக்களைத் தவிர்க்க நவீன தொழில்நுட்பம் அறிமுகம்

 ரயில் குடிநீர் நிலையம் விஜயவாடா, நாக்பூர் அகமதாபாத், பிலாஸ்பூரில் அமைக்கப்படும்

Saturday, February 23, 2013

சில்லறை வர்த்தகமும் இந்திய விடுதலையும்

                    இந்தியாவில் தடம் பதித்து இடம் பிடிக்க வேண்டும் என்ற திட்டத்தை வரையறை செய்த ஆண்டு எந்த ஆண்டோ தெரியவில்லை; ஆனால் 2010-இல் திட்டத்தைத் தொடங்கி, 2012-இல் கடையைத் திறந்து விற்பனையைத் தொடங்கி விட்டது வால்மார்ட் நிறுவனம். கொள்கை அறிவிக்கை, எதிர்ப்பு, ஆதரிப்பு, விவாதம், வாக்கெடுப்புக் கோரிக்கை, வாக்கெடுப்புக்கு மறுப்பு என இந்திய அரசியலிலும், மக்கள் மத்தியிலு மாகப் பல தளங்களைத் தொட்டு, கடை விரித்துள்ள வால்மார்ட் இந்தியாவில் 14 மொத்த விற்பனை நிறுவனங்களை நடத்திக்கொண்டிருக்கிறது.  மேலும் விரிவாக்கம் செய்ய முனைகிறது.
இந்திய அடித்தட்டு மக்களின், நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை மிக நயமாகச் சுரண்டும் நோக்குடன் சில்லறை வர்த்தகத்தில் நுழைய முனைந் துள்ளது, வால்மார்ட் நிறுவனம். தமிழகத்தில், சென்னையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இயக்கங்கள் வால்மார்ட் நிறு வனத்தை எதிர்த்துப் போராட்டத்தைத் தொடங்கி யுள்ளன.
காங்கிரஸ் கட்சி - ‘சில்லறை வணிகத்திற்குள் அந்நிய முதலீட்டுக்கு இடமில்லை’ என்று கொள்கை பேசிய காங்கிரஸ் கட்சி - சில்லறை வணிகத்திற்குள் வால்மார்ட் போன்ற நிறுவனங்களை வரவேற்பதற்கு என்ன காரணம்?
காங்கிரஸ் கட்சிக்கேயுரித்தான முதலாளித்துவ மனப்பான்மைதான்!
இந்தியாவில் தடம் பதித்து இடம் பிடிக்க வேண்டும் என்ற திட்டத்தை வரையறை செய்த ஆண்டு எந்த ஆண்டோ தெரியவில்லை; ஆனால் 2010-இல் திட்டத்தைத் தொடங்கி, 2012-இல் கடையைத் திறந்து விற்பனையைத் தொடங்கி விட்டது வால்மார்ட் நிறுவனம்.கொள்கை அறிவிக்கை, எதிர்ப்பு, ஆதரிப்பு, விவாதம், வாக்கெடுப்புக் கோரிக்கை, வாக்கெடுப்புக்கு மறுப்பு என இந்திய அரசியலிலும், மக்கள் மத்தியிலு மாகப் பல தளங்களைத் தொட்டு, கடை விரித்துள்ள வால்மார்ட் இந்தியாவில் 14 மொத்த விற்பனை நிறுவனங்களை நடத்திக்கொண்டிருக்கிறது.மேலும் விரிவாக்கம் செய்ய முனைகிறது.இந்திய அடித்தட்டு மக்களின், நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை மிக நயமாகச் சுரண்டும் நோக்குடன் சில்லறை வர்த்தகத்தில் நுழைய முனைந் துள்ளது, வால்மார்ட் நிறுவனம்.தமிழகத்தில், சென்னையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இயக்கங்கள் வால்மார்ட் நிறு வனத்தை எதிர்த்துப் போராட்டத்தைத் தொடங்கி யுள்ளன.காங்கிரஸ் கட்சி - ‘சில்லறை வணிகத்திற்குள் அந்நிய முதலீட்டுக்கு இடமில்லை’ என்று கொள்கை பேசிய காங்கிரஸ் கட்சி - சில்லறை வணிகத்திற்குள் வால்மார்ட் போன்ற நிறுவனங்களை வரவேற்பதற்கு என்ன காரணம்?காங்கிரஸ் கட்சிக்கேயுரித்தான முதலாளித்துவ மனப்பான்மைதான்!
ஒரு நாட்டின் அரசு வேறொரு நாட்டுடன் அரசியல், பொருளாதார உறவு கொள்ளும்போது, இரண்டு அரசுகளுமே தத்தமது மண்ணின் உழைக்கும் வர்க்கங்களுக்கு எதிராக, நாட்டு அளவில் உறவு கொள்கின்றன என்றால், அந்த நாடுகள் தீவிர முதலாளித்துவ மனப்பான்மை கொண்டவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  அத்தகைய - அதே - முதலாளித்துவ மனப்பான்மை தான் காங்கிரஸ் மண்டையில் நிரம்பி வழிகிறது.  அதனால்தான் அதன் பொருளாதார அறிவு, இந்திய மக்களைச் சிறிதும் திரும்பிப் பார்க்க மறுக்கிறது.
வால்மார்ட் (Wallmart) மட்டுமின்றி, டெஸ்கோ (Tesco), கேர் ஃபோர் (Care Four) போன்ற நிறுவனங் களும் இந்தியாவில் கடை திறந்து, கல்லா கட்டி, பின் இந்தியாவை வழித்தெடுக்கத் துடிக்கின்றன.
இந்த நிறுவனங்கள் இந்தியாவைத் தேர்ந் தெடுக்கக் காரணம்?
இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியில் (GDP) சில்லறை வர்த்தகம் 11 விழுக்காடாக உள்ளது.  இதன் மதிப்பு 2015-இல் 833 பில்லியன் அமெரிக்க டாலராகும்.  2018-இல் 1.3 ட்ரில்லியன் (ஒரு ட்ரில்லியன் = 1 லட்சம் கோடி) அமெரிக்க டாலராக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. போதாக்குறைக்கு, பிற எந்த நாட்டையும் விட இந்தியர்களை மிகச் சுலபமாக ஏமாற்ற, இருக்கவே இருக்கிறது ஆன்மிக வாய்க்கால்.  அதிலே முயன்றால், இந்தியச் செல்வத்தைத் தாராளமாக வேட்டையாட லாமே இந்த வணிக நிறுவனங்கள்! இதற்கு அனுகூலமாக பல உபரிக் காரியங் களையும் செய்யும் இந்த வணிக நிறுவனங்கள்.
‘சில்லறை வர்த்தகம் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வரி வருவாய் அதிகரிக்கும்’ என பிரதமர் மன் மோகன் நம்புகிற வேளையில், அந்நிய நிறுவனங் களை நுழைப்பதற்கான காரணம் என்று ‘இந்திய விவசாயிகளை இடைத்தரகர்கள் கொள்ளையிட்டு வருவதாகவும் வால்மார்ட், விவசாயிகளிடம் நேரடி யாகக் கொள்முதல் செய்து விற்கப்போவதால், நியாயமான விலை கிடைக்கும் என்றும்’ ஆளுங் கட்சிக் கும்பல் கதை பரப்பி வருகிறது.இது முற்றிலும் தவறு என்று மறுத்துரைக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பெப்சி, கோக் போன்ற மென்பானங்கள் இந்திய உள்நாட்டுப் பானமான காளிமார்க் போன்றவற்றை எப்படி தந்திரமாக அழித்தன என்று சுட்டிக்காட்டுகிறது.
“பன்னாட்டுச் சில்லறை வர்த்தக நிறுவனங்களின் வருகையால் இந்திய விவசாயிகள் நிலங்களைப் பெரிய நிறுவனங்களிடம் இழக்கும் நிலை ஏற்படும்.  இது விவசாயத் துறையில் மோசமான மாற்றங்களை உருவாக்கும்” என எச்சரித்துள்ளார் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்.“வால்மார்ட் போன்ற நிறுவனங்களின் வருகை யால் சீனாவின் விவசாய விளைபொருட்கள் இந்தி யாவில் குவியும்.  இதனால் இந்திய விவசாயிகள் பாதிக்கப்படுவர்” என்று பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் மாநிலங்களுக்கிடையேயான கீரை, காய், பூ உள்ளிட்ட சில்லறை வர்த்தகங்களிலும் அந்நிய நிறுவனங்கள் நுழைந்து, வணிகர்களைத் தங்களுக்குத் தரகர்களாக மாற்றி, தொழிலை அப்படியே தங்கள் கைக்குள் அமுக்கிவிடும்.
மேலும், சில்லறை வணிகத்தில் அந்நிய முத லீட்டைக் கொண்டு வருவதால் ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழப்பர். இப்படியெல்லாம் நடக்காது என்று காங்கிரஸ் கட்சியால் எந்த வாக்குறுதியும் கொடுக்க முடியாது.  முட்டாள் தனமாகவாவது நம்பினால்தானே வாக் குறுதி கொடுக்க முடியும்!  மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது என்பது காங்கிரசின் மனசாட்சிக்குத் தான் நன்றாகத் தெரியுமே!
வேலைவாய்ப்பு பறிபோதல், சிறுகடைகள் மூடப்படுதல் போன்ற பொருளாதாரச் சுரண்டல் களைத் தவிர ‘‘சில்லறை வணிகத்திற்காகப் பிற நாடுகளில் தடம் பதிக்கும் நிறுவனங்கள் ஆயுதத் தளவாட உற்பத்தி செய்து, பயங்கரவாதிகளுக்கு விற்பனை செய்யும் மரண வியாபாரிகள்’’ என்று இடதுசாரிகள் எச்சரிப்பது, இந்திய மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.
நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் பொறுப்பை ஏற்கனவே உள்நாட்டுப் பெரு முதலாளிகளிடம் ஒப்படைத்து விட்டு, பொம்மை அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும், செப்பு கின்ற பசப்பு வார்த்தைகளுக்கு இந்தியர்கள் மயங்குவது கூடாது.‘சில்லறை வர்த்தகத்தில் அந்நியர் முதலீடு வேண்டாம்’ என்ற இடதுசாரிகளின் முழக்கத்தின் உயிரோட்டத்தைப் புரிந்துகொண்டு, கருத்துநிலை யளவில் விழிப்புணர்வு பெற வேண்டும்.கொள்கையளவில் நமது தமிழக மக்கள் எடுக்கின்ற முடிவே, நமது மண்ணின் விடுதலை மீண்டும் பறிபோகாமல் காப்பாற்றும்.

                          Thanks to  www.keetru.com