Tuesday, January 19, 2010

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் விரைவில் மக்கள் முன் தோன்றுவார் .

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் விரைவில் மக்கள் முன் தோன்றி உரை நிகழ்த்துவார் என அந்த இயக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ச.தமிழ்மாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு,

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றி இலங்கை அரசும், சில சர்வதேச சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தவறான தகவல்களை எமது இயக்கம் முற்றாக மறுக்கின்றது.

பிரபாகரன் அவர்கள் மிகுந்த நலமுடனும் பாதுகாப்புடனும் உள்ளார்.தேசியத் தலைவர் பற்றிய தவறான செய்திகளுக்கு எமது மக்கள் செவிசாய்க்காமல் எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு வீறுடன் களம் அமைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.

அதோடு தேசியத் தலைவர் வெகுவிரைவில் மக்கள் முன் தோன்றி உரிய நேரத்தில் உரை நிகழ்த்துவார்.

சர்வதேச ஒழுங்குகளுக்கு ஏற்ப எமது மக்களின் தற்போதைய நிலை, இலங்கை அரசின் நோக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்ட எமது தேசியத் தலைவர் விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை புதிய வடிவில் நெறிப்படுத்தியுள்ளார்.

எமது தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பாரிய இழப்புக்களை எமது மக்களுடன் நாம் சந்தித்துள்ளோம்.

இழப்புக்கள் என்பது எமக்கும் எமது மக்களுக்கும் புதியவைகள் அல்ல.சிங்கள அரசின் சிந்தனைகளைத் தாண்டி எமது விடுதலைப் போராட்டம் புதிய வடிவம் பெற்று வீறுடன் எழுந்து நிற்கின்றது.

சிங்கள பேரினவாத அரசு எமது மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு மதிப்பளித்து எமது மக்களுக்கு சரியான தீர்வு திட்டத்தை முன்வைக்காத வரை சிங்கள பேரினவாத‌த்திற்கு எதிராக எமது விடுதலைப்போர் எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தலைமையில் மாறுபட்ட வடிவங்களுடன் தொடர்வதுடன் எமது மக்களை ஏமாற்ற நினைக்கும் எந்த சக்தியினையும் நாம் அனுமதிக்கப்போவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. கதை சூப்பர்

    ReplyDelete
  2. Still u ppl want to make heist from sri lankan tamils?what is the use of pirabaharan coming alive again or what is he going to do?For the last 30 yrs everyone knoes how they cheated the Tamils.In 1987 Rajiv Gandhi saved him from Sri lankan forces.In 1990 Late president Premadasa saved him from IPKF.In 2009 there was noone to save him.He dug his own grave with 30,000 ppl.What is he going to achieve by showing his face in the Tamils struggle? Nothing.So let the International community and other organisations to solve the problem in the democratin non violint way.We(Tamils) dont want this blood thirsty killer back on the scene again.Anyone can say what happenend to pirabaharans family?? Are they living in paradise???

    ReplyDelete