Sunday, January 9, 2011

மர்மங்கள் நிறைந்த ஆழ்கடல்


பூமியின் பரப்பளவில் 70 சதவீதத்திற்கும் மேல் கடல் பரந்து விரிந்துள்ளது. கடலைப் பற்றி இதுவரை தெரிந்த விஷயங்களை விட, தெரியாத விடயங்களே. ஏராளமாக இருக்கின்றன. ஆழ்கடலுக்குள் செல்லச் செல்ல... வியக்க வைக்கும் பல அதிசயங்கள் வெளிப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆழ்கடலின் அடியில் ஒரு வித்தியாசமான சூழ்நிலை நிலவுகிறது.அஙகு 3 முதல் 6 டிகிரி வரையிலான உறைய வைக்கும் குளிர் நிலவுகிறது. நிலப்பரப்பில் இருப்பதை விட ஆயிரக் கணக்கான மடங்கு அதிகமான அழுத்தமும் இங்கு காணப்படுகிறது.
மனிதன் உயிர் வாழவே முடியாத இத்தகைய சூழ்நிலையில் சில அபூர்வ உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. பெரிய கண்களுடனும், பெரிய வாயுடனும், நீண்ட உணர்ச்சி உறுப்புகளுடனும் இருக்கும் ‘பயோலுமினிசென்ட்’ என்ற ஒருவகை மீன்கள் இங்கு வாழ்கின்றன.ஜெல்லி போன்ற உடலமைப்புக் கொண்ட இவை கடலுக்கு அடியில் இருக்கும் பாக்டீரியாக்களையும், நுண்ணுயிரிகளையும் உண்டு இவை உயிர் வாழ்கின்றன. பவளங்கள், சிறிய புழுக்கள், சுறா மீன்கள், டிராகன் மீன்கள், மணி வடிவமுள்ள ஜெல்லி மீன்கள் போன்ற மற்ற உயிரினங்களும் கடலின் அடி ஆழத்தில் சுதந்திரமாக வசித்து வருகின்றன.
அறியப்படாத பெருமளவு உயிரினங்கள் இன்னும் கடலுக்குள் புதைந்துள்ளன. கடலின் அந்தரங்கம் குறித்து ஆராய்ந்தால் வியப்பான பல விஷயங்கள் கிடைக்கும்.கடலுக்குள் பாரிய மலைகள்கடலின் ஆழத்தை நேரடியாகக் கண்டறிய முடியாது. ஒலி ஆலைகளின் மூலமாக இந்த ஆழத்தை நிர்ணயிக்கிறார்கள். உலகிலுள்ள முப்பது நாடுகள் ஒன்று சேர்ந்து கடலின் அந்தரங்கத்தை அறிய 1955ல் ஒரு அமைப்பை உருவாக்கின. 1970 ஆம் ஆண்டு வரை கிடைத்த ஆய்வுத் தகவல்களைக் கொண்டு கடலின் தரைப் பகுதி வரைபடமாக உருவாக்கப்பட்டது.பெருங்கடற்பரப்பின் நடுவே சுமார் பதின் மூன்றாயிரம் அடி உயரம், நூறு முதல் நூற்றி இருபது மைல் அகலம் கொண்ட மலைகள் சுமார் நாற்பதாயிரம் மைல்தூரம் பரவியுள்ளன. இது தவிர கண்டத் தீவுகள், கடல் தீவுகள், பவளத் தீவுகள் என்பனவும் நடுக்கடலில் காணப்படுகின்றன.

No comments:

Post a Comment