Sunday, November 15, 2009

AIEEE நுழைவுத்தேர்வு

ஒருமைக்கண் தான் கற்றகல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து

அதாவது ஒரு பிறவியில் நாம் கற்கும் கல்வி எழு பிறவிக்கும் பயன் தரும் என்பது வள்ளுவன் வாக்கு. கல்வி என்பது தற்பொழுது தொழிற்கல்வி குறிக்கும்.
“தொழிற்கல்வி தான்கற்கும் முன்பு ஒருவற்கு நுழைவுத்தேர்வு வெழுதல் கடனே” என்றவாறு புதுக்குறள் எழுதலாம். அதாவது தொழிற்கல்விற்கு ஒருவர் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்பதாகும்.

தனிச்சிறப்பு மிக்க NIT (National institute of Technology) போன்ற கல்லூரிகளில் பயில மாணவ மாணவிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

IITக்கு அடுத்தபடியாக உள்ள NIT அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் உள்ள 32 வகையான பொறியல் துறைகள மற்றும் 4 வகையான கட்டிடக்கலை படிப்பில் படிக்க வேண்டுமெனில் அதற்கென தனிப்பட்ட நுழைவுத் தேர்வான AIEEE தேர்வு எழுத வேண்டும். இந்தத் தேர்வானது அகில இந்திய அளவில் பொறியியல் படிப்பில் சேரத் தேவையானதாகும்.

B.E/B.Tech நுழைவுத் தேர்விற்கு குறைந்த பட்சம் பிளஸ்டூ தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஆனால் B.Arch நுழைவுத் தேர்விற்கு 10வது மற்றும் 12வது வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

இந்தத் தேர்வை எழுத பிளஸ்டூவில் கணிதமும், இயற்பியலும் கட்டாயம் படித்திருக்க வேண்டும். இது தவிர வேதியல்/ கம்யூட்டர் சயின்ஸ்/ பயாலஜி/ பயோடெக்னாலஜி இவற்றில் ஒன்றையும் படித்திருக்க வேண்டும். 1985ம் ஆண்டு அக்டோபர் 1 தேதிக்கு பின்பாக பிறந்திருப்போர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஊனமுற்றோர் பிரிவினர்க்கு 5 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு தரப்படும். இந்த நுழைவுத்தேர்வை தொடர்ச்சியாக 3 முறை மட்டுமே எழுத முடியும்.

B.E/B.Tech பொறியியல் மாணவர்களுக்கு 3 மணி நேரம் தனித்தேர்வாக வரும் ஏப்ரல் மாதம் 25ம் தேதி (25.04.2010) அன்று ஒன்பதாவது முறையாக நுழைவுத்தேர்வு நடைபெற இருக்கின்றது. B.Arch. கட்டிடக்கலை மாணவர் களுக்கு 3 மணிநேரம் தனிததேர்வாக 25. 04. 2010 அன்று மதியம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு சுமாராக 10 லட்சம் மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எழுத இருக்கின்றனர்.

முதன் முறையாக AIEEE நுழைவுத்தேர்வு மே 19, 2002 அன்று நாட்டின் 65 நகரங்களில் 396 தேர்வு மையங்களில் நடைபெற்றது. சுமார் 2 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இதன் மூலம் 102 பொறியியல் கல்லூரிகளில் 7116 இடங்கள் நிரப்பப்பட்டன. இதனுடன் 11 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் தங்களுக்கான மாணவர் களைத் தேர்தெடுத்தன. இவை படிப்படியாக வளர்ந்து 2008ம் ஆண்டு விண்ணப்பித்த 8,62,853 மாணவர்களில் 7,92,752 மாணவர்கள் இத்தேர்வை எழுதினார்கள்.

புதிதாக தொடங்கப்பட்ட கல்லூரி களைத் தவிர பழைய கல்லூரிகளில் உள்ள B.E/B.Tech படிப்பில் சுமார் 17,163 இடங்களும் B.Arch/B.Plan படிப்பில் 759 இடங்களும் நிரம்பின. பழைய கல்லூரிகளின் எண்ணிக்கையை பார்க்கும் போது அவற்றில் 20 NITகளும், 5 IIIT& IIMகளும், சுமார் 16 தனியார் பல்கலைக் கழகங்களும் 14 மத்திய மற்றும் மாநில அரசு கல்லூரிகளும் அடங்கும். கல்லூரிகளின் விபரத்தை www.cbse.nic.in என்ற தளத்தில் பார்க்கலாம்.

2008, 2009ம் ஆண்டு பிளஸ்டூ முடித்தவர் களும், 2010ம் ஆண்டு பிளஸ்டூ தேர்வு எழுத இருப்பவர்களும் இந்த நுழைவுத்தேர்விற்கு தகுதி உடையவர்கள். 2007ம் ஆண்டு பிளஸ்டூ முடித்தவர்கள் இதற்கு தகுதியற்றவர்கள்.

கடந்த வருடம் இத்தேர்வு நடந்ததை வைத்து பார்க்கும் பொழுது இந்த வருடம் இத்தேர்வு 05.12.2009 முதல் விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களை அனுப்ப 10.01.2010 அன்று கடைசி நாளாக இருக்கலாம்.

B.E/B.Tech படிப்பிற்கான தேர்வையோ அல்லது B.Arch/B.Plan படிப்பிற்கான தேர்வையோ மட்டும் எழுத விரும்பும் பொதுபிரிவினர் (OC) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மாணவர்கள் ரூ450யையும், எஸ்.சி, எஸ்டி மாணவர்கள் ரூ225யையும் தேர்வுக்கட்டணமாக செலுத்த வேண்டும்.

இரண்டு நுழைவுத்தேர்வையும் சேர்த்து எழுத விரும்பும் OC மற்றும் OBC மாணவர்கள் கூடுதலாக ரூ.300க்கும் SC/ST மாணவர்கள் ரூ150க்கும் ஆன வரைவு காசோலையை (DD) விண்ணப்பப்படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். இதனைப்பற்றிய முழு விபரங்களை www. cbse.nic.in அல்லது www.aieee.nic.in என்ற தளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு பற்றிய விபரங்கள்

•இது நாடு தழுவிய தேர்வு என்பதால், எல்லா மாநிலங்களிலும் எந்த வகை பள்ளித் திட்டத்திலும் 11, 12ஆம் வகுப்புகளில் மாணவர்கள் படித்திருக்க கூடிய பொதுவான பாடப்பகுதிகளை உள்டக்கிய பொது பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
•மாணவர்கள் மத்தியில் ஓர் தவறான எண்ணம் என்னவென்றால் CBSE மாணவர்கள் மட்டுமே இந்த நுழைவுத்தேர்வை எழுத முடியும் என்பதாகும். ஆனால் அனைத்து மாணவர்களும் இத்தேர்வை நன்றாக எழுத முடியும்.
•கேள்வி முறையில் முதல் வகை, 4 விடைகளில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் Objective Type முறை ஆகும்.
•ஒவ்வொரு தவறான விடைக்கும், சரியான விடைக்குரிய மதிப்பெண்ணில் கால்பகுதி (1/4) குறைக்கப்படும்.
•நன்கு தெரிந்த கேள்விகளுக்கு மட்டும் விடையளிக்க வேண்டும். விடையளிக்காத கேள்விகளுக்கு மதிப்பெண் குறைக்கப்பட மாட்டாது.
•புதிய முறையாக கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் மொத்த மதிப்பெண் 432 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
•ஓவ்வொரு பிரிவிலும் உள்ள கேள்விகள் 30 ஆக குறைக்கப்பட்டு 3 பிரிவுகளில் மொத்த மாக 90 கேள்விகள் கேட்கப்பட்டன.
•தமிழ்நாட்டில் 7 முக்கிய நகரங்களில் உள்ள சிண்டிகேட் வங்கியில் நேரிடையாக விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். இன்டர்நெட் வசதி உள்ளவர்கள்
ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் விண்ணப்ப படிவங்களை தபால் மூலம் கீழ்க்கண்ட முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

Assistant Secretary (AIEEE)
Central Board Of Seconday Education,
PS. 1-2 institutional Area,
IP Entonsionl Patparganj, Delhi 110092
Telephone No: 011 – 22239177-80
Extn: 110, 151, 157

தமிழ்நாட்டில் உள்ள NIT திருச்சியில், Chemical, Civil, Computer, EEE, ECE, IC, Mech, Metallury & Production ஆகிய துறைகள் உள்ளன. இவற்றில் 50 சதவீத இடங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 50 சதவீத இடங்கள் இதர மாநிலத்தைச் சேர்ந்தவர் களைக் கொண்டு நிரப்பபடுகின்றன.

அடுத்த இதழில் IITல்மாணவர் சேர்க்கைக்கு 11.04.2010 அன்று நடைபெற இருக்கும் நுழைவுத்தேர்வான IIT – JEEயை பற்றி விரிவாக பார்ப்போம்.

No comments:

Post a Comment