Tuesday, November 17, 2009


நான் ஒரு வேலை காரணமாக பேருந்தில் சென்றுகொண்டிருண்டேன். காலை நேரம் ஆதலால் பேருந்தில் சற்று அதிகமாகாவே நெரிசல். நான் மிகவும் போராடி பேருந்தின் நடுவில் ஒரு இருக்கையின் அருகில் நின்றுகொண்டேன்.
எனது அருகில் 65 வயது பாட்டி நின்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில், நான் நின்றிருந்த அருகில் சீட் காலியானது. நான் அந்த பாட்டியை உட்காரச்சொன்னேன்.
ஆனால்,
அவர் பின்னாடி யாரயோ அழைப்பது போல் தொன்றியாது. அவர் அழைத்தது அவரது கனவர். 70 வயதிருக்கும் அவர் உடல்நிலை சரியில்லாதவர் போலும். மிகுந்த அயர்ச்சியாக காணப்பட்டார்.
அவர் மிகவும் சிரமப்பட்டு பின்னாலிருந்து வந்து அந்த இருக்கையில் அமர்ந்தார். பிறகு அந்த பாட்டி நின்று கொண்டே பயணித்தார்.

நான் பார்த்து இதைத்தான் என்றாலும்,
எத்தனை ஆழமான காதல் இருவருக்கும்.அந்த பாட்டி நினைத்திருந்தால் தாராளமாக அந்த இருக்கையில் அமர்ந்திருக்கலாம்.

ஆனால் இது எப்படி...?
அப்போது தோன்றியது எனக்கு,
இதுதான் காதலோ என்று...

No comments:

Post a Comment