Thursday, November 26, 2009

காசிஆனந்தன் கதைகள்

குருவிக்கூடு
சிறகு முளைக்காத குருவிக்குஞ்சிகள் சிரித்து ஆரவாரித்தன. மரத்தில் இருந்த அணில்,குருவிக்கூட்டுக்குத்தாவி,“ உங்களுக்கு இன்னும் சிறகு முளைக்க வில்லை-சுதந்திரம் இல்லாத உங்களுக்கு என்ன சிரிப்பு?” என்று கேட்டது.குஞ்சுகள் கவனிக்கவில்லை. பாம்புக்கு இது வாய்ப்பானது.குஞ்சிகளின் சிரிப்பொலி கேட்டு,பாம்பு கூட்டுக்குள்நுழைந்தது.நொடிப்பொழுதில்-பாம்பின் வாயில் குஞ்சிகள் பலியாகிப் போயின். அணிலுக்கோ துயரம் தாங்கவில்லை.அது மீண்டும் இரைந்து கத்தியது.
“சிறகு விரி
பிறகு சிரி

உயர்வு

காற்றாடி நூலின் துணையோடு உயர்ந்து உயர்ந்து வானின் உச்சியில் ஏறியது.'பார்த்தீர்களா.....? நான் எவ்வளவு உயர்த்தில் இருக்கிறேன்.....' என்று தன் பெருமையை பறைசாற்றியது.பழைய வரலாற்றை அடியோடு மறந்தது காற்றாடி.'நூல் இனி எதற்கு..? என்று கூறிக்கொண்டே நூலைப்பட்டென்று அது அறுத்துக்கொண்டது.கொஞ்ச நேரத்தில்ஊரின் மூலையில்--ஒரு முள் மரத்தில் விழுந்து.உருக்குலைந்து கிடந்தது காற்றாடி.காற்றாடியின் கதை தெரிந்த முள்மரம் சொன்னது..

"ஏற்றி வைத்தவனை மறக்கிறவன் இறக்கி வைக்கப்படுவான்.!! !"

No comments:

Post a Comment